News April 16, 2024
புத்தரின் பொன்மொழிகள்

✍நம் வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை என்பதை உணர ஆரம்பித்துவிட்டால், நமக்குள் இருக்கும் ஆணவம் காணாமல் போய் விடும். ✍பிரார்த்தனைகளை விட மிகவும் உயர்ந்தது பொறுமை தான். ✍மனநிம்மதிக்கு இரண்டு வழிகள் தான் இருக்கின்றன; ஒன்று விட்டு கொடுப்பது இல்லையெனில் விட்டு விலகுவது. ✍அதிகமாக பேசுவதால் மட்டும் ஒருவன் அறிஞனாகிவிட மாட்டான். ✍உங்கள் மகிழ்ச்சிக்கும் துன்பத்திற்கும் நீங்களே காரணம்.
Similar News
News November 7, 2025
திருவாரூர்: இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு தெரிவித்திருந்தது. அதன் திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.7) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!
News November 7, 2025
INDIAN CITIZEN-ஆன ஆஸ்திரேலிய வீரர்

ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ், அந்நாட்டின் குடியுரிமையை துறந்து இந்திய குடியுரிமையை பெற்றுள்ளார். அவருடைய தாய் மும்பையை சேர்ந்த ஆங்லோ-இந்தியன் என்பதால் குடியுரிமையை பெற ஓராண்டு காலமாக முயற்சித்து வந்தார். இந்திய குடிமகனாக இருப்பதையே விரும்புவதாக அவர் அவ்வப்போது தெரிவித்திருக்கிறார். சர்வதேச போட்டிகளில் கலக்கிய இவர், இனி இந்தியராக Bengaluru FC அணியில் விளையாடவுள்ளார்.
News November 7, 2025
வங்கிக் கணக்கில் பணம்.. உடனே செக் பண்ணுங்க

2-10 ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இல்லாத அக்கவுண்டில் உள்ள பணத்தை எடுக்காமலே விட்டுவிட்டீர்களா? உங்களுக்காக RBI புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர் (அ) வாரிசுதாரர்கள் இந்த பணத்தை வட்டியுடன் பெற முடியும். நீண்ட காலமாக செயல்பாட்டில் இல்லாத உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க KYC ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். உங்கள் பழைய வங்கி கணக்கின் பேலன்ஸை <


