News October 11, 2025
கடலூர்: பிணமாக கரை ஒதுங்கிய சிறுவன் உடல்

சித்திரப்பேட்டை பகுதியை சேர்ந்த முகுந்தன்(16), கடந்த சில நாட்களுக்கு முன் சக மீனவர்களுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றபோது கடலில் தவறி விழுந்து மாயமானார். இதையடுத்து முகுந்தனை தேடும் பணியில் கடலோர காவல் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், ராசாப்பேட்டை கடற்கரையில் நேற்று சிறுவனின் உடல் கரை ஒதுங்கியது. தகவலறிந்த முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
Similar News
News October 11, 2025
கடலூர் அருகே லாரி மோதி ஒருவர் பரிதாப பலி

திட்டக்குடி அடுத்த வெண்கரும்பூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (67). இவர் நேற்று காலை வெண்கரும்பூர் சொசைட்டி பேருந்து நிறுத்தம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News October 11, 2025
கடலூர்: டிராபிக் FINE-ஐ ரத்து செய்யணுமா?

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு<
News October 11, 2025
35% மானியம்: கடலூர் கலெக்டர் அறிவிப்பு

கடலூரில் விலைப் பொருள்களுக்கான மதிப்புக்கூட்டும் அலகுகள் அமைப்பதற்கு மானியம் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதில், பொது பிரிவினருக்கு 25 % மானியமும், மற்ற பிரிவினர்களுக்கு கூடுதலாக 10% மானியமும் வழகப்படும். வேளாண் தொழில் முனைவோர்கள் வேலாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலகத்தை அணுக வேண்டும். மேலும் 9659299219 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.