News October 11, 2025

தேனியில் கல்வித்துறை தவிக்கும் நிலை

image

தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்தவர் இந்திராணி கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்றார். இதனால் திண்டுக்கல் சி.இ.ஓ.வாக உஷா என்பவரை கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். தற்போது 100 நாள் கடந்தும் நிரந்தர சி.இ.ஓ. நியமனம் செய்யவில்லை இதனால் கல்வி பணிகள் பாதிக்கப்படுகிறது. கையெழுத்து வாங்கவேண்டும் என்றால் 160 கி.மீ.தூரம் செல்ல வேண்டிய நிலை என கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

Similar News

News November 16, 2025

தேனி மருத்துவகல்லூரி மாணவிகள் விபத்தில் படுகாயம்

image

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் மாணவி ராகினி என்பவர் நேற்று (நவ.15) அவரது இருசக்கர வாகனத்தில் அவரது தோழியான மீனாட்சி என்பவரை அழைத்துக் கொண்டு தேனி சென்று விட்டு மீண்டும் கல்லூரிக்கு திரும்பி உள்ளார். மதுரை சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டது. இதில் மாணவிகள் இருவரும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து க.விலக்கு போலீசார் வழக்கு பதிவு.

News November 16, 2025

தேனி: வயிற்று வலியால் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

image

உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ் (37). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததன் காரணமாக அவருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதற்கு சிகிச்சை எடுத்தும் பலனளிக்காத காரணத்தினால் வலியின் வேதனையில் இருந்து வந்த ராஜேஷ் நேற்று (நவ.15) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு

News November 16, 2025

தேனி: 1,429 காலியிடங்கள்.. ரூ.71,900 வரை சம்பளம்

image

தேனி மக்களே, தமிழ்நாடு சுகாதாரத்துறையில் (TN MRB) காலியாக உள்ள Health Inspector Grade-II பணிகளுக்கு 1429 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளியில் தமிழை ஒரு படமாக பயின்று தகுதியான படிப்பை முடித்தவர்கள் நவ. 16 (இன்று)-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் – ரூ.19,500 – ரூ.71,900. மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். இத்தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!