News October 11, 2025
தென்காசி: ஜாமீனில் வெளிவந்தவர் மீது கொலை முயற்சி

தென்காசியில் அதிமுக பிரமுகர் வேலியப்பன் கொலை வழக்கில் ஜாமீனில் வந்த முத்துராஜை, கிருஷ்ணகிரியில் கொலை செய்ய முயன்ற 5 பேர் கொண்ட கூலிப்படையை போலீசார் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட வேலியப்பனின் அண்ணன் மகன் கார்த்திக், மற்ற 4 பேருடன் சேர்ந்து, கிருஷ்ணகிரி ஏரிக்கரையில் முத்துராஜை அரிவாள் மற்றும் பெட்ரோல் கேனுடன் துரத்தியது விசாரணையில் தெரியவந்தது.
Similar News
News October 11, 2025
தென்காசி: வேலை நாடும் இளைஞர்கள் கவனத்திற்கு

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற அக் 17ம் தேதி காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது. 8th, டிகிரி மற்றும் ஐ.டி.ஐ டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்கள் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் <
News October 11, 2025
தென்காசி: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் போதிய அளவு மழையின் தாக்கம் இல்லாததினால் காரணமாக அருவியின் நகரம் என போற்றப்படும் குற்றால அருவிகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் நாளுக்கு நாள் அருவியில் நீர்வரத்து குறைந்து வருவதால் விடுமுறை தினமான சனிக்கிழமை குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து சென்ற வண்ணம் உள்ளனர்.
News October 11, 2025
தென்காசி ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டம்

தென்காசி, 21வது வார்டு ரேஷன் கடையில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் அனைத்து பொருட்களும் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும், அளவு குறைவில்லாமல் கிடைக்க வேண்டும். மேலும் வேலை நாட்கள் முழுவதும் செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திடீரென அப்பகுதி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்