News October 11, 2025

கடலூர் அருகே காவல் நிலையத்தில் அடிதடி

image

ஆனந்தகுடியைச் சேர்ந்த முகில் வேந்தன் என்பவர் என்னநகரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பெண் கர்ப்பமான நிலையில், அவரை திருமணம் செய்து கொள்ள முகில் மறுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பெண் சிதம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து காவல் நிலையம் வந்த இருதரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

Similar News

News December 8, 2025

கடலூர்: இலவச சட்ட உதவிகள் வேண்டுமா!

image

கடலூர் மாவட்ட மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும். மேலும் தகவலுக்கு கடலூர் மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை அணுகலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!

News December 8, 2025

கடலூரில் பழைய வாகனங்கள் ஏலம்; எஸ்பி அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 16 நான்கு சக்கர வாகனங்கள், 34 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 50 வாகனங்கள் வருகிற டிச.23ம் தேதி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்படும் என்று எஸ்பி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஏலத்தில் கலந்து கொள்பவர்கள், இருசக்கர வாகனத்திற்கு ரூ.5 ஆயிரம், நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.10,000 செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.

News December 8, 2025

கடலூர்: ரூ.85,000 சம்பளத்தில் வேலை!

image

‘ஓரியண்டல் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி’ நிறுவனத்தில் காலியாக உள்ள Administrative Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 300
3. வயது: 21-30 (SC/ST-35,OBC-33)
4. சம்பளம்: ரூ.85,000
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>>
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க

error: Content is protected !!