News April 16, 2024
வெப்ப நோய்களை விரட்டும் மூலிகைக் குடிநீர்

வெயில் காலத்தில் ஏற்படும் தொற்று நோய்களில் இருந்து உடலை தற்காத்துக்கொள்ள தாகச்சமணி மூலிகைக் குடிநீரை பருகலாமென சித்த மருத்துவம் பரிந்துரைக்கிறது. பதிமுகம், கருங்காலி, வெட்டிவேர், கோரைக்கிழங்கு, நன்னாரி, ஏலம், சுக்கு, கிராம்பு, சீரகம், அதிமதுரம் போன்றவற்றின் தொகுப்பான தாகச்சமணி மூலிகைப் பொடியை (ஒரு தேக்கரண்டி) ஐந்து லிட்டர் நீரில் போட்டு லேசாகக் கொதிக்க வைத்து, குடிநீராக பயன்படுத்தலாம்.
Similar News
News September 16, 2025
தினமும் காலையில் இதை செய்ய மறக்காதீர்

*காலையில் எழுந்ததும் ஒரு சில நிமிடங்கள் மனதை லேசாக்கி, ஆழ்ந்த மூச்சு விடுங்கள் *ஓவ்வொரு நாளையும் புதிதாக தொடங்குங்கள் *காலை உணவை உட்கொள்ள தவறாதீர்கள் *இன்றைய நாளுக்கான உங்கள் வேலைகளை பட்டியலிடுங்கள் *சுறுசுறுப்பாக இருங்கள் *சக ஊழியர்களிடம் புன்னகையுடன் பேசுங்கள்.
News September 16, 2025
இதற்குதான் பாஜகவுடன் கூட்டணி..!

ஜெயலலிதா இறந்த பிறகு சிலர் அதிமுக ஆட்சியை கபளீகரம் செய்ய முயன்றதாகவும், அதனை காப்பாற்றியது மத்தியில் ஆட்சியில் இருந்த அரசுதான் (பாஜக) என்றும் EPS தெரிவித்துள்ளார். நன்றி மறப்பது நன்றன்று என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிய அவர், நன்றிக் கடனுக்காகவே பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதாக விளக்கம் அளித்துள்ளார். பாஜக எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை எனவும் EPS குறிப்பிட்டுள்ளார்.
News September 16, 2025
பதட்டம் நிறைந்த IND vs PAK போட்டிகள்

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா – பாக்., மோதும் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற போட்டியில் இந்தியா வென்றாலும், இதனை புறக்கணித்திருக்கலாம் என்பதே பலரது கருத்தாக இருக்கிறது. இந்நிலையில், இதற்கு முன்பு போர், தாக்குதல் ஆகியவற்றுக்கு இடையில் நடந்த இந்தியா – பாக்., போட்டிகள் குறித்து மேலே Swipe செய்து பாருங்கள். உங்க கருத்தை கமெண்ட்டில் சொல்லுங்க.