News October 11, 2025
மயிலாடுதுறையில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இன்று(அக்.10) இரவு 10 மணி முதல் நாளை(அக்.11) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது
Similar News
News October 11, 2025
மயிலாடுதுறை: ஆவின் நிலையம் அமைக்க அழைப்பு

மயிலாடுதுறையில் ஆவின் விற்பனை நிலையம் அமைத்து செயல்படுவதற்கு முகவர்கள் தேவைப்படுகின்றனர். விருப்பமுடையோர் தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்திற்கு நேரில் வருகை தந்து பயன்பெறலாம். மேலும் தாலுகா வாரியாக ஆவின்பால் பொருட்களின் மொத்த விற்பனையாளர்களாக செயல்பட விருப்பமுள்ளோர் ஒன்றியத்தை நேரில் அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 8015304755/8015304766/ 8807983824 எண்களை தொடர்பு கொள்ளலாம்.
News October 11, 2025
மயிலாடுதுறை அருகே புகையிலை விற்றவர் கைது

கிடாரங்கொண்டாளை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (58). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மயிலாடுதுறை தனிப்படை போலீசார், செம்பனார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதில் அவர் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 7 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து ரவிச்சந்திரனை கைது செய்தனர்
News October 11, 2025
மயிலாடுதுறை: இளைஞர்களுக்கு உதவித்தொகை!

மயிலாடுதுறை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் தொடர்ந்து புதுப்பித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசின் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். கல்வித்தரத்தின்படி மாதம் ரூ.200 முதல் ரூ.1000 வரை தொகை வழங்கப்படும். தகுதியுடையவர்கள் தேவையான ஆவணங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 28.11.2025க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.