News October 10, 2025
நாமக்கல்: குழந்தைத் திருமண தடுப்பு விழிப்புணர்வு

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தைத் திருமணத்தை தடுக்கும் நோக்கில் சிறப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறுமிகளின் கல்வியைப் பாதுகாக்கவும், அவர்கள் வாழ்க்கையை உறுதியான பாதையில் நகர்த்தவும் காவல்துறை சார்பில் பல்வேறு பிரசாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் நாமக்கல் மாவட்ட காவல்துறை சமூக ஊடகங்கள் வாயிலாகவும் இந்த விழிப்புணர்வை பரப்பி வருகிறது.
Similar News
News December 7, 2025
நாமக்கல்: கொடி நாள் நிதி வழங்கிய ஆட்சியர்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று டிசம்பர்-7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில், படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கொடி நாள் நிதி வழங்கி, இதனை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கூட்ட அரங்கில் முன்னாள் படைவீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
News December 7, 2025
நாமக்கல்: பள்ளியில் 14,967 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

நாமக்கல் மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200 வரை.
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. கடைசி தேதி: 11.12.2025.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: kvsangathan.nic.in
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 7, 2025
நாமக்கல்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு நாமக்கல் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்!


