News October 10, 2025
நாளை கிராம சபை கூட்டம்: ககன்தீப் சிங் பேடி பேட்டி

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர், “தமிழ்நாடு முழுவதும் நாளை (அக்.11) கிராம சபைக் கூட்டம் நடக்கிறது. இதில் வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். பைபர் நெட் இணைப்பை பயன்படுத்தி முதல்வர் பேசுவது, மாநிலம் முழுவதும் 10,000 கிராம பஞ்சாயத்துகளில் நேரலையாக ஒளிபரப்பாகும்” என கூறினார்
Similar News
News October 11, 2025
குடிநீர் வாரிய குறைகேட்பு கூட்டம்

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் குறை கேட்பு கூட்டம் அனைத்து குடிநீர் வாரிய அலுவலகங்களிலும் சனிக்கிழமை (11.10.25) நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். திருவெற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார் ஆகிய பகுதிகளில் இந்த அலுவலக கூட்டம் நடைபெறும்.
News October 11, 2025
திருமுருகன் காந்தி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

மே.17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வீட்டிற்கு இன்று (அக்.10) மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருந்தனர். அதன்பொருட்டு வெடிகுண்டு பரிசோதனை குழுவினர் வீட்டில் மோப்ப நாயுடன் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
News October 10, 2025
துணை நடிகையின் தாயை தாக்கிய நபர் கைது

சென்னையை அடுத்த ஆலப்பாக்த்தில் துணை நடிகை மீனாட்சி கோவிந்தராஜன், மற்றும் அவரது தாயாரையும் செருப்பால் அடித்த நபரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தகராறை தொடர்ந்து, தற்போது பழிவாங்கும் நோக்கில் செருப்பால் அடித்ததாக கைதான நபர் போலீசாரிடம் வாக்குமூலம் தந்துள்ளார்.