News October 10, 2025
தஞ்சாவூர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் உணவு திருவிழா

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு அரசு கலைப்பண்பாட்டுத்துறை – கலைப் பண்பாட்டு மையம், உணவுப் பாதுகாப்பு துறை சார்பில் நம்ம ஊர் திருவிழா மற்றும் தஞ்சாவூர் உணவு திருவிழா வருகிற 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ஐடிஐ மைதானத்தில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News December 8, 2025
தஞ்சை: திருமணத்தில் நகை திருடிய நபர் கைது

திருவாரூரை சார்ந்த பாஸ்கர் தனது சகோதரி மகளின் திருமணத்திற்காக தஞ்சாவூரில் நடைபெறும் திருமணத்திற்கு தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். திருமண மண்டபத்தில் வைத்திருந்த அரை பவுன் நகை மற்றும் ரூ.80 ஆயிரம் ரொக்கம் அடங்கிய பையை காணவில்லை. இது குறித்து கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, காவல்துறையினர் விசாரணையில் கோவில்வெண்ணியைச் சேர்ந்த புருஷோத்தமனை கைது செய்து, நகை, பணத்தை மீட்டனர்.
News December 8, 2025
தஞ்சை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆடுதுறை, தஞ்சை நகர், பேராவூரணி, அய்யம்பேட்டை, பூண்டி, மின் நகர் ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை ( டிச.9) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. மேலும் (டிச.10) வடசேரி மற்றும் ஈச்சங்கோட்டை துணைமின் நிலையங்களிலும் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. ஷேர் பண்ணுங்க
News December 8, 2025
தஞ்சை: அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி!

கும்பகோணம் அருகே கடந்த 30-ந் தேதி இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் படுகாயத்துடன் சாலையோரத்தில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


