News April 16, 2024
விவசாயிகள் நலனுக்கு மோடி அரசு என்ன செய்தது?

கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகள் நலனுக்கு மோடி அரசு செய்தது என்ன? என மநீம தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். பொள்ளாச்சியில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட கமல், டெல்லியில் மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆணிப்படுக்கை போட்டு வரவேற்றது. ஆனால் முதல்வராக இருந்த போது உழவர் சந்தைகள் அமைத்த கலைஞர், ரூ.7,000 கோடிக்கு விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தவரென புகழாரம் சூட்டியுள்ளார்.
Similar News
News November 10, 2025
‘அரசன்’ படத்தின் முக்கிய அப்டேட் சொன்ன வெற்றிமாறன்!

வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாக இருக்கும் ‘அரசன்’ படத்தின் ப்ரோமோ பெரும் வரவேற்பை பெற்றது. இந்த ப்ரோமோவின் ஷூட்டிங் 2 மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து படத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இச்சூழலில்தான், ‘மாஸ்க்’ படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெற்றிமாறன், படத்தின் ஷூட்டிங் வரும் 24-ம் தேதி தொடங்கும் என கூறியிருக்கிறார்.
News November 10, 2025
30% வாக்காளர்களை காணோம்: கடம்பூர் ராஜூ

தனது கோவில்பட்டி தொகுதியிலேயே 30% வாக்காளர்களை காணோம் என்று கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். தேர்தல் நேரத்தில் தில்லுமுல்லு என்பது திமுகவுக்கு கை வந்த கலை. இரட்டைபதிவு, இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளது என 30% பேரை கண்டுபிடிக்க முடியவில்லை. இவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும்; ஆனால், ஆள் இருக்க மாட்டார்கள். வாக்குப்பதிவு அன்று மட்டும் வந்து அந்த வாக்குகள் விழும் என்று சாடினார்.
News November 10, 2025
சுவாசக் கோளாறுகளை குணப்படுத்தும் கசாயம்!

சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடவும், சுவாசக் கோளாறுகளிலிருந்து நிவாரணம் பெறவும் புதினா கசாயம் உதவும் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✤தேவையானவை: புதினா, மிளகுத்தூள், உப்பு ✤செய்முறை: புதினாவை கிள்ளி போட்டு, தண்ணீரில் 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். பின்னர் அதை வடிகட்டி, இறக்கி உப்பு, மிளகு தூள் கலந்தால் புதினா கசாயம் தயார். அனைவருக்கும் இச்செய்தியை பகிரவும்.


