News October 10, 2025

இருமல் சிரப் விவகாரம்: நாடு முழுவதும் சோதனை

image

இருமல் சிரப் குடித்த 24 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், நாடு முழுவதும் <<17963280>>இருமல் சிரப்<<>> தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களிலும், மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனம் சோதனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிரப்களை ஆய்வகங்களில் பரிசோதிக்கவும் திட்டமிட்டுள்ளது. அதேபோல், இத்தனை நாள்களாக ‘Coldrif’ சிரப்பை பரிசோதிக்காதது ஏன் என்று தமிழக உணவு & மருந்துகள் (TN FDA) அமைப்பிடமும் விளக்கம் கேட்டுள்ளது.

Similar News

News October 11, 2025

கனவு கன்னி ‘கனகவதி’ CLICKS

image

‘ஏஸ்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ருக்மிணி வசந்த், ‘மதராஸி’ மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். காந்தாரா திரைப்படத்தில் இளவரசி கனகவதி கதாபாத்திரத்தில் அசத்திய ருக்மிணி, திரைப்பட ப்ரோமோஷனுக்கு கனகவதியாகவே சென்றிருந்தார். அந்த போட்டோஸை, தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கனகவதியை பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.

News October 11, 2025

ராசி பலன்கள் (11.10.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க

News October 10, 2025

மீண்டும் முன்ஜாமின் கோரிய N.ஆனந்த்

image

கரூர் துயரம் தொடர்பாக தவெக பொ.செ., N.ஆனந்த், துணை பொ.செ., CTR நிர்மல்குமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, முன்ஜாமின் கோரி இருவரும் தாக்கல் செய்த மனுவை மதுரை HC அமர்வு தள்ளுபடி செய்தது. இந்நிலையில், மீண்டும் முன்ஜாமின் கோரி HC அமர்வில் N.ஆனந்த் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!