News October 10, 2025
TN போலீஸ் விசாரணையில் உண்மை வெளிவராது: தவெக

TN போலீஸை மட்டுமே வைத்து அமைக்கப்பட்டுள்ள SIT மூலம் உண்மை வெளிவராது என SC-யில் தவெக கூறியுள்ளது. SIT விசாரணையை எதிர்க்கவில்லை என வாதாடிய தவெக தரப்பு, காவல்துறை அதிகாரிகளை மட்டுமே வைத்து SIT அமைத்ததை எதிர்க்கிறோம் என தெளிவுபடுத்தியுள்ளனர். மேலும், கரூர் விவகாரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
Similar News
News October 11, 2025
மனநல ஆரோக்கியத்திற்கு சிறந்த வழிகள்

உலக மனநல நாள், நமது மன நலனுக்கு முன்னுரிமை அளிக்க நினைவுப்படுத்தும் விதமாக கடைபிடிக்கப்படுகிறது. மன ஆரோக்கியம், மகிழ்ச்சியான வாழ்க்கையை உருவாக்க வழிவகுக்கும். தினமும், நாம் அடிப்படையான சில பழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் மனநலத்தை மேம்படுத்தலாம். அவை என்னென்ன பழக்கங்கள் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக பாருங்க. என்ஜாய் பண்ணுங்க.
News October 11, 2025
16-ம் நாள் காரியம் வரை.. ஆதவ் அர்ஜுனா

தங்களின் குடும்ப உறுப்பினர்களை இழந்தது போன்ற நிலையில் தவெக உள்ளது என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். எனவே, 16-ம் நாள் காரியம் முடிந்த பிறகு பாதிக்கப்பட்டோரை சந்திக்கவுள்ளோம் என கூறினார். கைதான நிர்வாகிகளை விரைவில் வெளியில் கொண்டு வருவோம் என்ற அவர், இந்த 15 நாள்களில் அரசியல் ரீதியாக தாங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை என்றார். செப்.27-ல் துயரம் நடந்த நிலையில் அக்.12-ல் 16-ம் நாள் நிறைவடைகிறது.
News October 11, 2025
கனவு கன்னி ‘கனகவதி’ CLICKS

‘ஏஸ்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ருக்மிணி வசந்த், ‘மதராஸி’ மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். காந்தாரா திரைப்படத்தில் இளவரசி கனகவதி கதாபாத்திரத்தில் அசத்திய ருக்மிணி, திரைப்பட ப்ரோமோஷனுக்கு கனகவதியாகவே சென்றிருந்தார். அந்த போட்டோஸை, தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கனகவதியை பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.