News October 10, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் பண்ணை சார்ந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் (அக்.9) அறிக்கை வெளியிட்டுள்ளார். விவசாயம், அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்ற மற்றும் 2 ஆண்டுகள் கள அனுபவம் உள்ளவர்கள் கடலூர் மகளிர் திட்ட இயக்குநர் அலுவலகத்தில் வரும் அக்.17-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 9444094258 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Similar News
News December 8, 2025
கடலூர்: ராட்சத முதலையால் மக்கள் அச்சம்

கம்மாபுரம் அருகே உள்ள தட்டானோடை கிராமத்தில் ஓடை வாய்க்கால் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று சுமார் 6 அடி நீளம் கொண்ட ராட்சத முதலை ஓடையில் கிடந்துள்ளது. இதனை கண்டு அச்சமடைந்த மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து முதலையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் முதலையை பிடிக்கும் வரை ஓடையில் யாரும் மீன்பிடிக்க கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News December 8, 2025
கடலூர்: இலவச பிளம்பர் பயிற்சி அறிவிப்பு

கடலூர் இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மற்றும் கீரப்பாளையம் இந்தியக் கிராமப்புற கல்வி ஏவுதள மையம் இணைந்து நடத்தும் பிளம்பிங் மற்றும் சானிட்டரி பணிகள் பயிற்சி (இலவச குழாய்கள் பொருத்துதல் பயிற்சி) வருகின்ற டிசம்பர் 10-ம் தேதி முதல் கீரப்பாளையம் காமராஜர் தொழில் நுட்ப கல்லூரியில் நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு 9629752271, 9092493827 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
News December 8, 2025
கடலூர்: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன் உதவி

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் tabcedco.net என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!


