News October 10, 2025
தருமபுரியில் கூட்டுறவுத் துறை நுழைவுத் தோ்வு அறிவிப்பு!

தருமபுரி மாவட்ட கூட்டுறவு துறையில் காலியாக உள்ள 103 உதவியாளர் பணியிடங்களுக்கான நுழைவுத் தேர்வு அக்டோபர் 11 அன்று நடைபெறுகிறது. மொத்தம் 1829 தேர்வர்கள் பங்கேற்கின்றனர். தேர்வுகள் தருமபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்லூரி, நல்லம்பள்ளி மையங்களில் நடைபெறும். தேர்வர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் உதவி எண்கள் 04342-233803, 6382688363 வழங்கப்பட்டுள்ளன.
Similar News
News October 10, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்..

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (அக்டோபர்-10) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்..
News October 10, 2025
பருவமழை குறித்தும் ஆட்சியர் ரெ.சதீஸ் ஆலோசனைக் கூட்டம்

தருமபுரி பழைய ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித்துறையின் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்தும் அலுவலர்களுடனான ஆட்சியர் ரெ.சதீஸ், அவர்கள் தலைமையில் இன்று (அக்.10) மாலை 3 மணி அளவில் நடைபெற்றது. இதில், அனைத்து முன்னேற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
News October 10, 2025
முதல்வரை வரவேற்ற தர்மபுரி எம்.பி மணி

இன்று (அக்.10) ஓசூர் பேளகொண்டப்பள்ளி விமான நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தார். இந்நிலையில் தர்மபுரி திமுக கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் மணி எம்.பி முதலமைச்சரை சந்தித்து புத்தகம் கொடுத்து வரவேற்றார். இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் மதியழகன் ஒய் பிரகாஷ் மேயர் உள்ளிட்டவர் உடன் இருந்தனர்.