News October 10, 2025

நெல்லையில் 2 தனிப்படை அமைத்து தேடப்படும் கைதி

image

கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த முத்துச்செல்வன்(34), கோவில்பட்டியில் தகராறில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு, பாளை சிறையில் அடைக்கப்பட்டார். வயிற்றுவலி காரணமாக நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர், கழிவறை செல்வதாக கூறி தப்பினார். பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரைத் தேடி வருகின்றனர். நெல்லையில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கோவில்பட்டி போலீசாரும் தேடுதல் நடத்துகின்றனர்.

Similar News

News October 11, 2025

மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில்; தமிழ்நாடு பிசி, எம்பிசி, மற்றும் சிறுபான்மையினர் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கூட்டுறவு வங்கிகளின் மூலம் மாநில அரசின் உத்திரவாதத்தின் அடிப்படையில் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் உயர்கல்வியை பயில கல்வி கடன் திட்டங்கள் வழங்கப்படுகிறது. விண்ணப்படிவம் www.tabcedco.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

News October 10, 2025

வாங்க கற்றுக் கொள்வோம்: பொதுமக்களுக்கு அழைப்பு

image

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் வைத்து நாளை (அக்.11) காலை 10 மணிக்கு வாங்க கற்றுக் கொள்வோம் என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு வகுப்பு நடைபெற உள்ளது. இதில் தீயணைப்புத் துறையின் பணிகள் குறித்த விபரங்கள் வழங்கப்பட உள்ளது. எனவே இதில் பொதுமக்கள் மற்றும் நண்பர்கள் என பலரும் கலந்து கொள்ள தீயணைப்பு நிலைய அலுவலர் பலவேசம் கேட்டுக் கொண்டுள்ளார்.

News October 10, 2025

நெல்லை: குழந்தைகளின் பெற்றோர்கள் கவனத்திற்கு!

image

நெல்லை மக்களே, அக்.1 முதல் மத்திய அரசு 5 – 17 வயதுள்ள குழந்தைகளுக்கு கை விரல் மற்றும் கண் விழி பதிவு (BIOMETRIC) கட்டாயம் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு கட்டணம் ஏதும் இல்லை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். இதை UPDATE செய்தால் தான் பள்ளிகளில் சேர்க்கை, ஸ்காலர்ஷிப், அரசு உதவிகள் பெற முடியும் என அறிவுறுத்தியுள்ளது. ஆதார் மையங்களில் இலவசமா UPDATE பண்ணுங்க. இந்த தகவலை பெற்றோர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!