News October 10, 2025
இராம்நாடு: டிகிரி இருந்தால் ரயில்வே வேலை!

இந்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 368 துறை கட்டுப்பாட்டாளர் (Section Controller) பணிக்கு 368 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 20 -33 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதியாக ஏதாவதொரு டிகிரி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <
Similar News
News October 10, 2025
ராம்நாடு: ஆன்லைன் மோசடி ரூ.51,000 மீட்பு

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தேவி என்பவர் இணையத்தின் மூலம் ரூ.51,000 பணத்தை இழந்ததாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் துறையினர் விரைவான விசாரணை மேற்கொண்டு, இழந்த ரூ.51,000 பணத்தையும் மீட்டனர். மீட்கப்பட்ட பணத்தை இன்று (அக்.10) இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் உரிய நபரிடம் வழங்கினார்கள்.
News October 10, 2025
ராம்நாடு: அரசு ஐ.டி.ஐயில் பயிற்சி முகாம் அறிவிப்பு

பரமக்குடி அரசு ஐ.டி.ஐயில் பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் பயிற்சிக்குரிய தேர்வு முகாம் (அக்.13) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 5க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்கள், 50க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் நேரடியாக பயிற்சியாளர்களை தேர்வு செய்ய உள்ளதால், கலந்து
கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
News October 10, 2025
இராமநாதபுரம்: கிராம ஊராட்சி செயலாளர் காலி பணியிடங்கள்

இராமநாதபுரம் மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்கள் இனசுழற்சி மூலம் பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பான விவரங்கள் www.tnrd.gov.in என்ற இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளது. இணையதள முகவரியில் இன்று முதல் (அக்.10) விண்ணப்பிக்கலாம். (விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 09.11.2025) *ஷேர் பண்ணுங்க