News October 10, 2025

கடலூர்: தாய் திட்டியதால் மகன் தற்கொலை

image

காட்டுமன்னார்கோயில் அடுத்த பழஞ்சநல்லூரை சேர்ந்தவர் அறிவழகன் (25). இவரது மனைவி அக்ஸில்லா மேரி (24) தற்போது 3 மாத கர்ப்பமாக இருப்பதால், தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் அறிவழகனுக்கும், அவரது அம்மா மதுமதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், மனமுடைந்த அறிவழகன் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Similar News

News October 10, 2025

கடலூர்: அழுகிய நிலையில் பெண் சடலம்

image

கடலூர், அண்ணா பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத பெண் சடலம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பரபரப்பாக இருக்கக்கூடிய கடலூர் மையப் பகுதியான அண்ணா மேம்பாலத்தின் கீழ், அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் இன்று மதியம் புது நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதையெடுத்து, சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 10, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் பண்ணை சார்ந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் (அக்.9) அறிக்கை வெளியிட்டுள்ளார். விவசாயம், அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்ற மற்றும் 2 ஆண்டுகள் கள அனுபவம் உள்ளவர்கள் கடலூர் மகளிர் திட்ட இயக்குநர் அலுவலகத்தில் வரும் அக்.17-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 9444094258 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News October 10, 2025

கடலூர்: கனரா வங்கியில் வேலை APPLY NOW!

image

கனரா வங்கியில் தமிழ்நாடு முழுவதும் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. பணி: Graduate Apprentices
2. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.15,000
4. வயது வரம்பு: 20-28 (SC/ ST-33, OBC 31)
5. கடைசி தேதி: 12.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>இங்கே கிளிக்<<>> செய்யவும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!