News October 10, 2025
தருமபுரி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

தருமபுரி மாவட்டத்தில் (அக்.11) சனிக்கிழமை காலை 11 மணிக்கு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. மக்கள் தங்கள் ஊர் வளர்ச்சி, அரசு நலத்திட்டங்கள் மற்றும் பொதுப் பிரச்சினைகள் குறித்து கருத்துகள் தெரிவிக்கலாம். இந்த கூட்டத்துக்கு மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
Similar News
News October 10, 2025
மத்திய அரசு வேலை, ரூ.92,000 வரை ஊதியம்

தேசிய அருங்காட்சியகத்தில் காலியாக உள்ள உதவியாளர், டெக்னீஷியன், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th, ஐடிஐ, Visual Art / Fine Arts / Commercial Arts) டிகிரி முடித்த 19 முதல் 35 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிக்கு ஏற்ப மாதம் ரூ. 19,900 – ரூ. 92,000 வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News October 10, 2025
தருமபுரி: மின் கட்டணத்தை குறைக்க சூப்பர் வழி!

தர்மபுரி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் <
News October 10, 2025
தருமபுரியில் கூட்டுறவுத் துறை நுழைவுத் தோ்வு அறிவிப்பு!

தருமபுரி மாவட்ட கூட்டுறவு துறையில் காலியாக உள்ள 103 உதவியாளர் பணியிடங்களுக்கான நுழைவுத் தேர்வு அக்டோபர் 11 அன்று நடைபெறுகிறது. மொத்தம் 1829 தேர்வர்கள் பங்கேற்கின்றனர். தேர்வுகள் தருமபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்லூரி, நல்லம்பள்ளி மையங்களில் நடைபெறும். தேர்வர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் உதவி எண்கள் 04342-233803, 6382688363 வழங்கப்பட்டுள்ளன.