News October 10, 2025
சிவகாசிக்கு புதிய டி.எஸ்.பி நியமனம்

சிவகாசி டிஎஸ்பியாக பணியாற்றி வந்த பாஸ்கரன் விழுப்புரம் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து திருப்பூர் மாநகரில் துணை ஆணையராக பணியாற்றி வந்த அனில்குமார் சிவகாசி டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ள அனில் குமார் விரைவில் பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. SHARE IT
Similar News
News December 7, 2025
விருதுநகர்: மனைவி மீது பெட்ரோல் குண்டு வீசிய காதல் கணவர்

சிவகாசி ரிசர்வ்லைன் இந்திரா நகரை சேர்ந்தவர் முத்து விக்னேஸ்வரன் (22). பட்டாசு தொழிலாளியான இவர் 4 மாதத்திற்கு முன் பாக்கியலட்சுமியை காதல் திருமணம் செய்துள்ளார். முத்து விக்னேஸ்வரன் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது பாக்கியலட்சுமி பணம் தர மறுத்ததால் அவரை மிரட்டுவதற்காக அவர் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். அதிஷ்டவசமாக அவர் உயிர் தப்பிய நிலையில் முத்து விக்னேஸ்வரனை கைது செய்தனர்.
News December 7, 2025
விருதுநகர்: இனி வரிசைல நிக்காதிங்க.. எல்லாமே ONLINE!

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களே இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு போய் நீண்ட நேரம் வரிசைல நின்னு காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இனி நீங்க <
News December 7, 2025
விருதுநகர்: கல்லூரி மாணவிகளை கடித்து குதறிய நாய்கள்

காரியாபட்டியில் நேற்று தனியார் கல்லூரி மாணவிகள் மாலை வீடு திரும்ப மந்திரி ஓடை பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தனர். அப்போது, அங்கு சுற்றி திரிந்த நாய்கள் 4 மாணவிகள், பெரியவர் ஒருவரை கடித்தது. அதே போல் ஆவியூர், டி.வேப்பங்குளம், வக்கணாங்குண்டு கிராமங்களில் 5க்கும் மேற்பட்டவர்களை நாய்கள் கடித்தன. காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர். நாய்களை அப்புறப்படுத்த மக்கள் கோரிக்கை வைகின்றனர்.


