News October 10, 2025
அக்டோபர் 10: வரலாற்றில் இன்று

*1906–எழுத்தாளர் ஆர்.கே. நாராயணன் பிறந்தநாள். *1954–நடிகை ரேகா பிறந்தநாள். *1973–இயக்குநர் ராஜமௌலி பிறந்தநாள். *1974– தமிழறிஞர் மு. வரதராசன் மறைந்த நாள். *1987–விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையே யாழ்ப்பாணத்தில் போர் தொடக்கம். *1991-நாகப்பட்டினம் மாவட்டம் உருவானது. *2015–ஆச்சி மனோரமா மறைந்த நாள். *2022–வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் மறைந்த நாள்.
Similar News
News October 10, 2025
பிரபல பாடகர் மரணம்.. அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்

அசாமைச் சேர்ந்த <<17781694>>பிரபல பாடகர் ஜுபின் கார்க்<<>> மரணத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி வருகின்றன. வழக்கு தொடர்பாக அவரது உறவினர் உள்பட 5 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், ஜுபினின் தனிப் பாதுகாப்பு அதிகாரிகளான நந்தேஷ்வர் போரா, பரேஷ் பைஷ்யா ஆகியோர் இன்று கைதாகியுள்ளனர். அவர்களது வங்கிக் கணக்கில் கோடிக் கணக்கில் பணப்பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக போலீஸ் விசாரித்து வருகிறது.
News October 10, 2025
National Roundup: இந்தியாவின் முதல் ரோபோடிக் ஆபரேஷன்

*இந்தியாவிற்கு தூதர்களை அனுப்ப ஆப்கன் முடிவு
*இருமல் சிரப் வழக்கில் கைதான ரங்கநாதன் ம.பி., கோர்ட்டில் ஆஜர்
*கர்வா செளத் விழாவில் பங்கேற்று பூஜை செய்த டெல்லி CM ரேகா குப்தா
*TenXu என்ற நிறுவனத்தை தொடங்கினார் சச்சின் டெண்டுல்கர்
*இந்தியாவின் முதல் ரோபோட்டிக் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை டெல்லி AIIMS-ல் வெற்றிகரமாக செய்யப்பட்டது.
News October 10, 2025
போர்வை இல்லாமல் தூங்கவே மாட்டீங்களா?

வேர்த்து கொட்டினாலும் பரவாயில்லை போர்வை இல்லாமல் தூங்கமாட்டேன் என கூறும் நபரா நீங்கள்? இதற்கு பின்னணியில் உளவியல் காரணம் இருக்கிறதாம். சண்டை சச்சரவு அதிகம் இருக்கும் வீட்டில் வளர்ந்தவர்கள் உங்கள் நரம்பு மண்டலம் எப்போதும் Alert Mode-ல் இருக்குமாம். எனவே போர்வையை போர்த்தி படுப்பதால் ஒருவகை நிம்மதி கிடைப்பதாக டாக்டர்கள் சொல்கின்றனர். உங்களுக்கும் இந்த பழக்கம் இருக்கா? கமெண்ட் பண்ணுங்க..