News October 10, 2025
கரூர் துயரில் உண்மை வெளிவர வேண்டும்: பிசி ஸ்ரீராம்

கரூர் துயரில் யார் மீது தவறு இருந்தாலும் உண்மை வெளிவர வேண்டும் என பிசி ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். கரூர் சம்பவத்தை பற்றி பயமின்றி உரக்கப் பேச வேண்டும் என்றும் காலங் கடந்தால் உண்மை சிதைந்துவிடும் எனவும் அவர் X-ல் பதிவிட்டுள்ளார். மேலும், இதில் பேச்சு சுதந்திரம் இருக்கிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News October 10, 2025
₹50 கட்டினால் போதும், ₹35 லட்சம் வரை கிடைக்கும் திட்டம்

Post Office-ன் கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தில் தினமும் 19 வயதிலிருந்து ₹50 கட்டினால், 80 வயதாகும் போது அதிகபட்சமாக ₹35 லட்சம் வரை கிடைக்கும். இதில், 55 வயதுக்குட்பட்டவர்கள் சேரலாம். திட்டத்தில் சேர்ந்தவர் மெச்சூரிட்டி தொகையை பெறும் முன் இறக்க நேர்ந்தால், நாமினிக்கு அந்த தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர அருகில் உள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 10, 2025
TN போலீஸ் விசாரணையில் உண்மை வெளிவராது: தவெக

TN போலீஸை மட்டுமே வைத்து அமைக்கப்பட்டுள்ள SIT மூலம் உண்மை வெளிவராது என SC-யில் தவெக கூறியுள்ளது. SIT விசாரணையை எதிர்க்கவில்லை என வாதாடிய தவெக தரப்பு, காவல்துறை அதிகாரிகளை மட்டுமே வைத்து SIT அமைத்ததை எதிர்க்கிறோம் என தெளிவுபடுத்தியுள்ளனர். மேலும், கரூர் விவகாரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
News October 10, 2025
இந்த ஆப்’லாம் இருக்கு: இனி Queue எதற்கு!

உலகமே நவீனமயமாகி விட்ட நிலையில், அரசும் அதற்கேற்ப பல மக்கள் சேவைகளில் மாற்றங்களை செய்து வருகிறது. ஒரு காலத்தில் ரயிலில் டிக்கெட் எடுக்க, தொலைந்து போன டிரைவர் லைசன்ஸ் போன்றவற்றை பெற அரசு அலுவலகத்திற்கு நடையோ நடை’னு நடக்க வேண்டும். ஆனால், டிஜிட்டல் இந்தியாவில் பல மாற்றங்கள் வந்துவிட்டன. மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆப்கள், உங்களின் தினசரி வேலைகளுக்கு அதிக அளவில் உதவும். SHARE IT.