News October 10, 2025
CM ஸ்டாலினுக்கு திறமை இல்லை: EPS

திமுக ஆட்சியில், குடிநீரில் மலம் கலக்கும் கொடுமையான செயல் நடப்பதாக EPS விமர்சனம் செய்துள்ளார். கையாலாகாத அரசு ஆட்சி செய்வதால் தான் வேங்கைவயலில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கவில்லை என்று குற்றம்சாட்டிய EPS, அந்த பிரச்னை தீர்வதற்குள் தற்போது சோழவந்தான் பகுதியில் உள்ள நீர்த்தொட்டியில் மலம் கலக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். இவற்றையெல்லாம் தீர்க்க கூடிய திறமை CM-க்கு திறமை இல்லை என்றும் அவர் சாடினார்.
Similar News
News October 10, 2025
TN போலீஸ் விசாரணையில் உண்மை வெளிவராது: தவெக

TN போலீஸை மட்டுமே வைத்து அமைக்கப்பட்டுள்ள SIT மூலம் உண்மை வெளிவராது என SC-யில் தவெக கூறியுள்ளது. SIT விசாரணையை எதிர்க்கவில்லை என வாதாடிய தவெக தரப்பு, காவல்துறை அதிகாரிகளை மட்டுமே வைத்து SIT அமைத்ததை எதிர்க்கிறோம் என தெளிவுபடுத்தியுள்ளனர். மேலும், கரூர் விவகாரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
News October 10, 2025
இந்த ஆப்’லாம் இருக்கு: இனி Queue எதற்கு!

உலகமே நவீனமயமாகி விட்ட நிலையில், அரசும் அதற்கேற்ப பல மக்கள் சேவைகளில் மாற்றங்களை செய்து வருகிறது. ஒரு காலத்தில் ரயிலில் டிக்கெட் எடுக்க, தொலைந்து போன டிரைவர் லைசன்ஸ் போன்றவற்றை பெற அரசு அலுவலகத்திற்கு நடையோ நடை’னு நடக்க வேண்டும். ஆனால், டிஜிட்டல் இந்தியாவில் பல மாற்றங்கள் வந்துவிட்டன. மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆப்கள், உங்களின் தினசரி வேலைகளுக்கு அதிக அளவில் உதவும். SHARE IT.
News October 10, 2025
நடிகை த்ரிஷாவுக்கு திருமணம்.. வெளியானது அப்டேட்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷாவுக்கு எப்போது கல்யாணம் என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது. இதற்கு கிட்டத்தட்ட தற்போது பதில் கிடைத்துவிட்டது. சண்டிகரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை த்ரிஷா விரைவில் கரம் பிடிக்கவுள்ளதாகவும், இது பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம் என்றும் கூறப்படுகிறது. செய்தி அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை என்றாலும், ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.