News October 10, 2025
இந்தியா – UK பேச்சுவார்த்தை: முக்கிய அம்சங்கள்

இந்தியா- UK இடையேயான தடையற்ற வணிக ஒப்பந்தத்தின் அடிப்படையில் பின்வரும் உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. *இந்தியாவில் அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்கப்படும் *2030-க்குள் இருநாடுகள் இடையிலான வர்த்தகத்தை ₹4.97 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு *பிரிட்டனின் ஒன்பது முன்னணி பல்கலை.,கள் இந்தியாவில் கிளையை நிறுவும் *பாலிவுட் படங்களை பிரிட்டனில் தயாரிக்க திட்டம்.
Similar News
News October 10, 2025
இருமல் சிரப் விவகாரம்: நாடு முழுவதும் சோதனை

இருமல் சிரப் குடித்த 24 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், நாடு முழுவதும் <<17963280>>இருமல் சிரப்<<>> தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களிலும், மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனம் சோதனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிரப்களை ஆய்வகங்களில் பரிசோதிக்கவும் திட்டமிட்டுள்ளது. அதேபோல், இத்தனை நாள்களாக ‘Coldrif’ சிரப்பை பரிசோதிக்காதது ஏன் என்று தமிழக உணவு & மருந்துகள் (TN FDA) அமைப்பிடமும் விளக்கம் கேட்டுள்ளது.
News October 10, 2025
EPS அதிமுகவை உள்வாடகைக்கு விட்டுள்ளார்: உதயநிதி

சமீப காலமாக, EPS-ஐ உதயநிதி கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், EPS-க்கு சுயமரியாதை என்றால் என்னவென்றே தெரியாது என மீண்டும் காட்டமாக விமர்சித்துள்ளார். அதிமுகவை EPS வாடகைக்கு எடுத்துள்ளதாக கூறிய உதயநிதி, தற்போது அதை அவர் உள்வாடகைக்கு விட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுகவின் தோள் மீது ஏறி பாஜக சவாரி செய்துகொண்டே தமிழகத்தை ஆட்சி செய்ய முயல்வதாகவும் சாடினார்.
News October 10, 2025
BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்

தமிழகத்தில் பல பகுதிகளில் ஏற்கெனவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று கோவை, நீலகிரி, ஈரோடு, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், தி.மலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் கையோடு குடையை எடுத்துச் செல்லுங்கள். SHARE IT.