News October 9, 2025
சுதந்திரமாக கொலை செய்கிறார்கள்: EPS

தமிழகத்தில் குற்றவாளிகள் சுதந்திரமாக கொலை செய்து வருவதாக EPS சாடியுள்ளார். போலீஸை கண்டு குற்றவாளிகளுக்கு பயமில்லை எனவும், நெல்லை காங்., மாவட்ட தலைவர் கொலை வழக்கில் தற்போதுவரை யாரையும் கைது செய்யவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். அதேபோல், தலைவர்களின் பிறந்தநாள் கூட்டத்திற்கு கூட அரசு அனுமதி அளிப்பதில்லை, கோர்ட் சென்றே அனுமதி பெற வேண்டியிருப்பதாக EPS தெரிவித்தார்.
Similar News
News October 10, 2025
Live-In உறவில் பெண்கள் 50 துண்டுகளாக வெட்டப்படுவர்

Live-In ரிலேசன்ஷிப் தற்போது டிரெண்ட்டாக இருப்பதாக உ.பி. கவர்னர் ஆனந்திபென் படேல் தெரிவித்துள்ளார். Live-In ரிலேசன்ஷிப்பினால் இப்போதுள்ள இளம்பெண்கள் 15-20 வயதில் குழந்தை பெறுவதாகவும், இதை பார்க்கும்போது வேதனையாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், Live-In உறவில் இருந்து பெண்கள் விலகியிருக்க வேண்டும், இல்லையென்றால் 50 துண்டுகளாக வெட்டப்பட்டு கொல்லப்படவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
News October 10, 2025
IND Vs WI: இந்தியா பேட்டிங்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இந்த 2-வது போட்டியிலும் வென்று வெஸ்ட் இண்டீஸை ஒயிட் வாஷ் செய்ய இந்திய அணி முயற்சிக்கும். ஆனால், இப்போட்டியில் வென்று, முதல் போட்டியின் தோல்விக்கு பழிதீர்க்கவும், தொடரை சமன் செய்யவும் வெஸ்ட் இண்டீஸ் அணி போராடும். முதல் டெஸ்ட்டில் இன்னிங்ஸ் + 140 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.
News October 10, 2025
BREAKING: தமிழகம் முழுவதும் நாளை நடக்கிறது

TN-ல் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை கிராம சபைக் கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இக்கூட்டத்தில் ஊர், தெரு, சாலையின் சாதிப் பெயர்களை மாற்றுவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், பொது நிதி, டெங்கு காய்ச்சல் தடுப்பு, அரசின் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.