News April 15, 2024
ஈரான் அமைச்சருடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை

ஈரான் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட சரக்குக் கப்பலில் சிக்கியுள்ள 3 தமிழர்கள் உட்பட 17 இந்தியர்களை விடுவிப்பது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சருடன், மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது அங்கு நிலவும் சூழல் குறித்து கேட்டறிந்த ஜெய்சங்கரிடம், விரைவில் சரக்குக் கப்பலில் உள்ள இந்தியர்களை, இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதிக்கப்படுமென ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Similar News
News December 30, 2025
‘விஜய் தேர்தலுக்கு பின் நடிக்க வருவார்’

கரியரின் உச்சத்தை விட்டுவிட்டு முழு அரசியல்வாதி ஆகியுள்ளார் விஜய். இதனால் கவலையில் உள்ள அவரது ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளார், நடிகை சிந்தியா லூர்டே. புது இயக்குநர் தினேஷ் தீனா இயக்கும் ‘அனலி’ டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நாயகியாக நடிக்கும் சிந்தியா, 2 வருடத்திற்குள் விஜய் மீண்டும் படத்தில் நடிப்பார் எனவும், அவருடன் நிச்சயம் நடிப்பேன் என்றும் பேசியுள்ளார்.
News December 30, 2025
புதிய சாதனை படைத்த ஜேசன் ஹோல்டர்

T20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் பெற்றுள்ளார். 2025-ல் மட்டும் அவர், 67 போட்டிகளில் 97 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ரஷித் கானின் சாதனையை (96 விக்கெட்கள், 2018) அவர் முறியடித்துள்ளார். 3-வது இடத்தில் டுவைன் பிராவோ (87 விக்கெட்கள், 2016) உள்ளார். ஹோல்டரை GT அணி, IPL மினி ஏலத்தில் ₹7 கோடிக்கு வாங்கியுள்ளது.
News December 30, 2025
RSS நினைப்பதை சீமான் பிரதிபலிக்கிறார்: திருமா

சீமான் பேசும் அரசியலில் பெரியார் வெறுப்பு ஆழமாக உள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார். திமுகவை மட்டுமே சீமான் எதிர்க்கவில்லை என்ற அவர், அதன் அடிப்படை தத்துவத்தை கேள்விக்குறியாக்குகிறார் எனவும், RSS நினைப்பதை சீமான் பிரதிபலிக்கிறார் என்றும் விமர்சித்துள்ளார். மேலும், இதனால்தான் சீமானின் கருத்தை விமர்சிப்பதாகவும், தனிப்பட்ட வெறுப்பும், உள்நோக்கமும் இல்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.


