News April 15, 2024
ஈரான் அமைச்சருடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை

ஈரான் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட சரக்குக் கப்பலில் சிக்கியுள்ள 3 தமிழர்கள் உட்பட 17 இந்தியர்களை விடுவிப்பது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சருடன், மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது அங்கு நிலவும் சூழல் குறித்து கேட்டறிந்த ஜெய்சங்கரிடம், விரைவில் சரக்குக் கப்பலில் உள்ள இந்தியர்களை, இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதிக்கப்படுமென ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 5, 2025
‘ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்

‘ஆர்யன்’ படத்தின் கிளைமாக்ஸை மாற்றி வெளியிடுவதாக நடிகர் விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார். சென்னையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், கிளைமாக்ஸ் குறித்து எதிர்மறையான கருத்துக்கள் வந்ததால், ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த இன்னொரு கிளைமாக்ஸை இன்று முதல் படத்தில் சேர்த்து வெளியிடுவதாக தெரிவித்துள்ளார். நீங்கள் ‘ஆர்யன்’ படம் பார்த்தீங்களா? படம் எப்படி இருந்தது என கமெண்ட் பண்ணுங்க.
News November 4, 2025
செல்போன் ரீசார்ஜ்.. இது 6 மாதம் இலவசம்

BSNL தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய சம்மன் பிளானை அறிமுகம் செய்துள்ளது. இதில், ₹1,812-க்கு ரீசார்ஜ் செய்தால் ஓராண்டுக்கு தினமும் 2GB டேட்டா, 100 SMS மற்றும் அன்லிமிட்டெட் கால் உள்ளிட்டவற்றை பெறலாம். முக்கிய அம்சமாக, இந்த திட்டத்தில் BiTV பிரீமியம் சப்ஸ்கிரிப்சனை 6 மாதத்திற்கு இலவசமாக பெறலாம். இந்த ஆஃபர் நவ.18 வரை மட்டுமே அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
News November 4, 2025
PAK-கிற்கு அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை வழங்கும் சீனா

சீனாவின் அதிநவீன 8 நீர்மூழ்கி போர் கப்பல்களை (Hangor – Class Diesel – Electric Submarines) அடுத்த ஆண்டு தங்களது கடற்படையில் சேர்க்க உள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இவை அதிநவீன ஆயுதங்கள், சென்சார்களை கொண்டிருப்பதோடு, நீருக்குள் வாரக்கணக்கில் இருக்கும் அளவிற்கு பேட்டரி திறனை கொண்டிருக்கும். இந்த தொழில்நுட்பத்திலான நீர்மூழ்கி கப்பல்கள் இந்தியாவிடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


