News April 15, 2024
மணிப்பூரை பிரிக்க விட மாட்டோம்

மணிப்பூரை பிரிக்க விட மாட்டோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மணிப்பூரில் பிரசாரம் செய்த அவர், மக்களவைத் தேர்தல் மணிப்பூரை பிரிக்க நினைப்பவர்களுக்கும், ஒற்றுமையை உருவாக்க நினைப்பவர்களுக்கும் இடையிலான போர் என்றார். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட பிரதமர் மோடி முன்னுரிமை அளித்து வருவதாகத் தெரிவித்தார். மணிப்பூர் கலவரத்தில் குறைந்தது 220 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 10, 2025
வேலூரில் 1,056 பேர் ஆப்சென்ட்!

வேலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை எழுதுவதற்கு 9,561 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் தேர்வு எழுத வி.ஐ.டி. பல்கலைக்கழகம், தொரப்பாடி தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, ஸ்ரீபுரம் ஸ்பார்க் பள்ளி ஆகிய 3 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் 8,505 பேர் எழுதினர் எனவும், 1,056 பேர் எழுத வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 10, 2025
தவெக மீது நடவடிக்கை கூடாது: அரசு ரகசிய ஆர்டர்

அரசையும், திமுகவையும் விமர்சிக்கும் தவெகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என போலீசாருக்கு அரசு ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெகவின் பொதுக்குழுவில் விஜய் தான் CM வேட்பாளர் என அறிவிக்கப்பட்டு விட்டதால், அதிமுக – தவெக கூட்டணி ஏற்பட வாய்ப்பில்லை. எனவே தேவையில்லாமல் விஜய்யை டென்ஷனாக்கி அதிமுக கூட்டணிக்கு செல்ல வைத்து விடக்கூடாது என்பதால் இந்த ரகசிய உத்தரவாம்.
News November 10, 2025
பாஜகவிற்கு ஆதரவு இல்லை.. வெளிப்படையாக அறிவிப்பு

நாங்கள் எப்போதும் ஒரு தனிப்பட்ட கட்சியையோ, அரசியல் தலைவரையோ ஆதரிப்பதில்லை என RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். நாங்கள் ராமர் கோயிலை கட்ட விரும்பினோம், அதனால் தான் பாஜகவை ஆதரித்தோம். ஒருவேளை காங்கிரஸ் கட்சி ராமர் கோயிலை கட்ட விரும்பியிருந்தால், அக்கட்சியை ஆதரித்து இருப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், கொள்கைக்குதான் ஆதரவு, கட்சிக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.


