News October 9, 2025
தென்காசி: வேலை நாடும் இளைஞர்கள் கவனத்திற்கு

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அக்.17ல் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற வலைதளத்தில் Employer Loginல் நிறுவனம் தொடர்பான விவரங்களை பதிவு செய்ய வேண்டும். வேலைநாடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெற என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 10, 2025
தென்காசி: கணவன் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி – கணவன் பலி

கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள பருவக்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் போஸ் (49). இவரது நடத்தையில் மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டதால் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்து கணவன் போஸ் மீது வெந்நீரை அவரது மனைவி ஊற்றியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த போஸ் நேற்று அக் 10ம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுக்குறித்து போலீசார் விசாரணை.
News October 10, 2025
தென்காசி: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

தென்காசி மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News October 10, 2025
தென்காசி: ஆட்டோ மீது பைக் மோதி ஒருவர் பலி

தென்காசி, கடையம் அருகே சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்த ஜீவா (22) மற்றும் முத்துக்குமார் (25) ஆகியோர் டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகின்றனர். வி.கே.புரத்தில் இருந்து பைக்கில் ஊருக்கு சென்று கொண்டிருந்தபோது ஆழ்வார்குறிச்சி மெயின் ரோட்டில் ஆட்டோ மீது பைக் மோதியதில் ஜீவா பலத்த காயமடைந்து தென்காசி அரசு மருத்துவமனையில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுக்குறித்து போலீசார் விசாரணை.