News October 9, 2025
BREAKING: இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2025-ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு, ஹங்கேரி எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாகோர்காய் என்பவருக்கு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. பேரழிவுக் காலத்தில் இலக்கியம் மூலம் ஆற்றிய பங்களிப்புக்கும், கலையின் ஆற்றலை நிலைநிறுத்தியதற்கும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். Satantango, War & War, Seiobo There Below, The Last Wolf and Herman உள்ளிட்டவை இவரின் முக்கிய நூல்களில் அடங்கும்.
Similar News
News October 10, 2025
Cinema Roundup: ரீ-ரிலீசாகும் அஞ்சான்

சூர்யாவின் ‘அஞ்சான்’ படம் விரைவில் ரீ-ரிலீசாகும் என அறிவிப்பு. *கிஷென் தாஸின் ‘ஆரோமலே’ படம் நவம்பர் 7-ம் தேதி வெளியாகிறது. *விஜய் சேதுபதியின் அடுத்த படத்திற்கு தேசிய விருது வென்ற ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைக்கவுள்ளார். *ஜி.வி.பிரகாஷின் ‘மெண்டல் மனதில்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. *மகேஷ் பாபுவின் SSMB29 அதிகாரப்பூர்வ டைட்டில் நவ.16-ல் வெளியாகும் என தகவல்.
News October 10, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News October 10, 2025
பிஹாரின் அரசியல் முக்கியத்துவம்: PHOTOS

குறைவான கல்வியறிவு, அதிகமான வன்முறை, மோசமான நிர்வாகத்துக்கு பிஹாரை உதாரணம் காட்டுவது பொதுபுத்தியாக உள்ளது. நாட்டின் 3-வது பெரிய மாநிலமான பிஹார், ஆன்மிக, கலாசார, அரசியல்ரீதியாக இந்திய வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கிறது. புத்த, சமண மதங்கள் தோன்றிய அங்கு தான் உலகப் புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகமும் நிறுவப்பட்டது. பிஹாரில் நிகழ்ந்த 3 முக்கிய அரசியல் நிகழ்வுகளை மேலே ஸ்வைப் செய்து பாருங்க.