News October 9, 2025
சைதாப்பேட்டை: பக்கோடா சாப்பிட்ட பெண் பலி

சைதாப்பேட்டையை சேர்ந்தவர் சரிதா (38). இவர், நேற்று முன்தினம் இரவு வெங்கடாபுரத்தில் உள்ள சாலையோர கடையில் காலிபிளவர் பக்கோடா வாங்கி சாப்பிட்ட அடுத்த சில நிமிடத்தில் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக கிண்டி போலீசில் அவரது மகள் அளித்த புகாரின் பேரில், போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடைகாரர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 10, 2025
சென்னை: புதிய ரேஷன் கார்டு வேண்டுமா?

சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் அக்.2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் வரும் 11-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், ரேஷன் அட்டையில் பெயர் மாற்றம், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிப்பு, ரேஷன் அட்டையில் போன் எண் இணைப்பு உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.
News October 10, 2025
கண்கலங்க வைத்த பாசப்போராட்டம்

திருச்சியை சேர்ந்த கல்பனா குடும்பத்துடன் அந்தமானில் வசித்து வருகிறார். கடந்த 3மாதங்களுக்கு முன்உடல் நலக்குறைவு காரணமாக சொந்த ஊருக்கு வந்த கல்பனாவை, அவரது அக்கா மலர் கவனித்து வந்தார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து தங்கை கல்பனா அந்தமான் புறப்பட்ட போது, வழியனுப்ப வந்த மலர், பிரிய மனமில்லாமல் மயங்கி விழுந்தார். இருவரின் பாச போராட்டத்தால், தங்கை வீடு திரும்பினார். இதனால் விமானம் தாமதமாக புறப்பட்டது.
News October 10, 2025
சென்னை: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

சென்னை மாவட்டம் முழுவதும் “Knights on Night Rounds” என்ற திட்டத்தின் கீழ் இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பெருநகர சென்னை காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்புகொள்ளலாம்.