News April 15, 2024

தபால் வாக்குகள் பதிவு செய்யும் காவல்துறையினர்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குப்பதிவு நாள் அன்று தேர்தல் பணியில் ஈடுபட உள்ள தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த காவல்துறையினர் 745 பேர் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்ய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்றும் நாளையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று ஏராளமான காவல் துறையினர் தங்கள் தபால் வாக்குகளை பதிவு செய்தனர்.

Similar News

News March 14, 2026

தூத்துக்குடி: கேஸ் புக் செய்வதில் சிக்கலா.? புதிய எண்கள்

image

தமிழ்நாட்டில் இண்டேன் கேஸ் நிறுவனம் சார்பில் முன்பதிவு செய்ய வேண்டிய புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி WhatsApp மூலம், 7588888824, ​SMS மூலம், 7718955555, Missed Call மூலம், 8454955555, மற்றும் INDIAN OIL APP மூலம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க..

News March 14, 2026

தூத்துக்குடி: டிரைவர் விஷம் குடித்து தற்கொலை.!

image

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே சிவத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் (32) என்பவர், டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவரது வீட்டில் நடந்த குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று, அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சாயர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 13, 2026

தூத்துக்குடி: நீதி கிடைப்பதை அதிமுக உறுதி செய்யும் – EPS

image

விளாத்திகுளம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை – கொலை நாட்டையே உலுக்கியுள்ளது. களத்தில் உறவினர்கள் – ஊர்மக்கள் போராட்டமும் வலுப்பெற்று வருகிறது. இவ்வளவு கொடூரமான வழக்கில் குற்றவாளியை கண்டறிய முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய கேவலம். தூத்துக்குடி நிர்பயாவிற்கு உரிய நீதி கிடைப்பதை அதிமுக உறுதி செய்யும் என எடப்பாடி பழனிச்சாமி தனது X தள பதிவில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!