News October 9, 2025
சற்றுமுன்: நாகேந்திரன் மரணம்.. பெரும் பரபரப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A1 குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள தாதா நாகேந்திரன், ஸ்டான்லி ஹாஸ்பிடலில் உயிரிழந்தார். 2005-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து பல்வேறு ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து செய்து வந்த நாகேந்திரனை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் கைது செய்தனர். சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News October 9, 2025
பெண்களுக்கு 12 நாள்கள் லீவு… ஏன் தெரியுமா?

மாதத்திற்கு ஒரு நாள் என ஆண்டுக்கு 12 நாள்கள் மாதவிடாய் விடுப்பு வழங்க CM சித்தராமையா தலைமையிலான கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, அரசு, தனியார் உள்பட தொழில்துறை நிறுவனங்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். முன்னதாக, பிஹாரில் 2 நாள்களும், ஒடிசாவில் ஒரு நாளும் மாதவிடாய் விடுப்பு வழங்கப்படுகிறது. TN-ல் மகப்பேறு விடுப்பு உள்ள நிலையில், மாதவிடாய் விடுப்பு வழங்கப்படுமா?
News October 9, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் ₹7,000 அதிகரித்தது

தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு சற்றும் குறைவில்லாமல் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது வெள்ளி விலை. இன்று ஒரே நாளில் மட்டும் வெள்ளி கிலோவுக்கு ₹7,000 அதிகரித்துள்ளது. தற்போது, 1 கிராம் வெள்ளி ₹177-க்கும், ஒரு கிலோ ₹1.77 லட்சத்திற்கும் விற்கப்பட்டு வருகிறது. அக்டோபரில் மட்டும் 9 நாள்களில் வெள்ளி கிலோவுக்கு ₹16,000 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News October 9, 2025
ஒரு கடிதம் எழுதினேன், அதை உனக்கு அனுப்பினேன்..

‘நலம் நலம் அறிய ஆவல்’, ‘பதில் கடிதம் கிடைக்கும் வரை காலமெல்லாம் காத்திருப்பேன்’, ‘அண்ணன்கிட்ட இருந்து கடுதாசி வந்துருச்சி’ போன்ற சொல்லாடல்களை கடந்த 2 தசாப்தங்களாக கேட்பது குறைந்திருக்கலாம். ஆனால், இந்த அழகிய தொடர்பியலை தாண்டியே நம் வாழ்க்கை பயணத்திருக்கும். உணர்வுகளை வார்த்தைகளால் கொட்டித் தீர்த்த கடிதங்களுக்காக இன்று ‘உலக தபால் தினம்’ கொண்டாடப்படுகிறது. உங்களுக்கு மறக்க முடியாத கடிதம் எது?