News October 9, 2025

சரிவுடன் தொடங்கிய இந்தியப் பங்குச்சந்தைகள்!

image

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்றும் சரிவுடன் தொடங்கியுள்ளது முதலீட்டாளர்களை கலக்கமடைய செய்துள்ளது. சென்செக்ஸ் 82 புள்ளிகள் சரிந்து 81,691 புள்ளிகளிலும், நிஃப்டி 5 புள்ளிகள் சரிந்து 25,040 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. Tata Motors, NTPC, HDFC Life, Maruti Suzuki உள்ளிட்ட நிறுவனங்களின் ஷேர்கள் சரிந்துள்ளன. அதேநேரம் TCS, Tata Steel, Reliance நிறுவனங்களின் பங்குகள் லாபம் கண்டுள்ளன.

Similar News

News October 9, 2025

ஒரு கடிதம் எழுதினேன், அதை உனக்கு அனுப்பினேன்..

image

‘நலம் நலம் அறிய ஆவல்’, ‘பதில் கடிதம் கிடைக்கும் வரை காலமெல்லாம் காத்திருப்பேன்’, ‘அண்ணன்கிட்ட இருந்து கடுதாசி வந்துருச்சி’ போன்ற சொல்லாடல்களை கடந்த 2 தசாப்தங்களாக கேட்பது குறைந்திருக்கலாம். ஆனால், இந்த அழகிய தொடர்பியலை தாண்டியே நம் வாழ்க்கை பயணத்திருக்கும். உணர்வுகளை வார்த்தைகளால் கொட்டித் தீர்த்த கடிதங்களுக்காக இன்று ‘உலக தபால் தினம்’ கொண்டாடப்படுகிறது. உங்களுக்கு மறக்க முடியாத கடிதம் எது?

News October 9, 2025

காங்., கூட்டத்திலும் TVK கொடி பறந்தது: செல்வப்பெருந்தகை

image

அதிமுக தவெக கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளதாக, EPS சூசகமாக தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியது. இதனிடையே அதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்த செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கூட்டத்திலும் தவெக கொடி பறந்ததாகவும் கூறியுள்ளார். EPS காண்பது பகல் கனவு என்றும், யாரும் அதிமுக கூட்டணியில் சேர மாட்டார்கள் எனவும் விமர்சித்துள்ளார்.

News October 9, 2025

BREAKING: இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

image

2025-ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு, ஹங்கேரி எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாகோர்காய் என்பவருக்கு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. பேரழிவுக் காலத்தில் இலக்கியம் மூலம் ஆற்றிய பங்களிப்புக்கும், கலையின் ஆற்றலை நிலைநிறுத்தியதற்கும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். Satantango, War & War, Seiobo There Below, The Last Wolf and Herman உள்ளிட்டவை இவரின் முக்கிய நூல்களில் அடங்கும்.

error: Content is protected !!