News October 9, 2025
திருவள்ளூர் மக்களே! COPTA Act எதற்குன்னு தெரியுமா?

இந்தியாவில் COTPA Act, 2003 என்ற சட்டத்தின்படி அரசு அலுவலகம், ஹோட்டல், பஸ் ஸ்டாப், ரயில் நிலையம், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, தியேட்டர், பூங்கா, பொதுசாலையில் புகைப்பிடித்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் சிகரெட் விற்றால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். இனி பொது இடங்களில் புகைப்பிடிப்பவரை கண்டால் உங்கள் பகுதி போலீஸ் ஸ்டேசன் &1 800-11-2356 -ல் புகாரளியுங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்
Similar News
News October 31, 2025
திருவள்ளூர்: மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு

திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் மாணவர்களை தொடர்ச்சியாக தயார்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் (நவ.05) அன்று காலை 10.30 மணிக்கு துவக்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 8489866698, 9626456509 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News October 31, 2025
ஆவடி மக்களே இன்றே கடைசி

மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் நடப்பாண்டிற்கான சொத்து வரியை இன்று (31.10.2025)க்குள் செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை அல்லது ரூ.5000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரியாளர்கள் மாநகராட்சி மையங்கள், வரிவசூலியர்கள், க்யூஆர் கோட் அல்லது இணையதளம் https://tnurbanepay.tn.gov.in வழியாகவும் வரி செலுத்தலாம் என ஆவடி மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
News October 30, 2025
திருவள்ளூர் மாவட்ட இரவு ரோந்து காவல் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (அக்.30) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


