News October 9, 2025
BREAKING: செந்தில்பாலாஜிக்கு புதிய பொறுப்பு

மேற்கு மண்டலத்தில் குறிப்பாக, கோவையில் திமுக வெற்றிக்கு தேவையான அனைத்து அஸ்திரங்களையும் எடுக்க செந்தில்பாலாஜிக்கு தலைமை அங்கீகாரம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கட்சியில் உள்ளடி வேலை பார்ப்பவர்கள், கோஷ்டி சேர்ப்பவர்களை களையெடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். அதோடு, 2026 தேர்தலில் கரூருக்கு பதிலாக கோவையில் ஏதேனும் ஒரு தொகுதியில் செந்தில்பாலாஜியை களமிறங்கவும் தலைமை அறிவுறுத்தியுள்ளதாம்.
Similar News
News October 9, 2025
BREAKING: இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2025-ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு, ஹங்கேரி எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாகோர்காய் என்பவருக்கு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. பேரழிவுக் காலத்தில் இலக்கியம் மூலம் ஆற்றிய பங்களிப்புக்கும், கலையின் ஆற்றலை நிலைநிறுத்தியதற்கும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். Satantango, War & War, Seiobo There Below, The Last Wolf and Herman உள்ளிட்டவை இவரின் முக்கிய நூல்களில் அடங்கும்.
News October 9, 2025
இலங்கை கடற்படை அட்டூழியம்: ஸ்டாலின் கடிதம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே தமிழக மீனவர்கள் 30 பேர் உள்பட 47 மீனவர்களை இலங்கை கடற்படை இன்று கைது செய்தது. இந்நிலையில், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க கோரி வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க கூட்டு பணிக்குழுவை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
News October 9, 2025
விஷமாக மாறிய மருந்து.. குழந்தையை கொன்ற துயரம்

ம.பி.,யில் இருமல் சிரப் குடித்த திவ்யான்ஷ் (6) உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சல் காரணமாக குழந்தையின் தந்தை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு, டாக்டர் பரிந்துரைத்த இருமல் சிரப்பை நாளொன்றுக்கு 4 முறை கொடுத்துள்ளார். மருந்து விஷமாக மாறி பிஞ்சு உயிர் பலியாகியுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் பட்டியலில், இக்குழந்தை பெயர் இல்லாததால், அரசின் ₹4 லட்சம் நிவாரணமும் கிடைக்கவில்லை.