News April 15, 2024
கடைசி நாளில் கூடுதல் அவகாசம்

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், கடைசி நாள் பிரசாரத்தன்று கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். கோடை வெயிலை கருத்தில் கொண்டு கடைசி நாளன்று மாலை 6 மணி வரை பிரசாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
Similar News
News April 29, 2025
அட்சய திருதியை நல்ல நேரம் எப்போது?

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் நன்மை என்று நமக்கு தெரியும். ஆனால், எந்த நேரத்தில் வாங்க வேண்டும் என்பது தெரியுமா? நாளை (29.04.2025) மாலை 5.31 மணி முதல் 30.04.2025 மதியம் 2.12 மணி வரை அட்சய திருதியை நடைபெறவுள்ளது. அதில், புதன்கிழமை (30.04.2025) அதிகாலை 5.41 மணி முதல் மதியம் 12.18 மணி வரை சுப முகூர்த்தமாகும். அப்போது தங்கம் வாங்கினால், வாழ்வில் இன்பம் பெருகும்.
News April 29, 2025
PAK-கிற்கு வந்த துருக்கி ஆயுதங்கள்?

இந்தியா – பாக். இடையிலான பதற்றம் விரைவில் தணியும் என்று நம்புவதாக துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். இருப்பினும், பாக். மக்களுக்கு வலுவான ஆதரவை வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார். துருக்கியின் ராணுவ சரக்குகளை ஏற்றிச் செல்லும் விமானங்கள், பாக்.-ல் தரையிறங்கியதாக தகவல் வெளியான நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இருப்பினும், எவ்வித ஆயுதங்களையும் அனுப்பவில்லை என துருக்கி மறுத்துள்ளது.
News April 29, 2025
பஜாஜின் புது EV ஸ்கூட்டர்.. என்னென்ன அம்சங்கள்?

புதிய சேட்டாக் 3503 EV ஸ்கூட்டர் வேரியன்டை பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மற்ற 35 சீரிஸின் விலையைக் காட்டிலும் சற்று குறைவாக, ₹1.10 லட்சத்திற்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்கேற்றாற் போல், குறைவான வசதிகளையே கொண்டுள்ளது. மணிக்கு 63 கி.மீ அதிகபட்ச வேகத்தில் செல்லும். மற்ற 3501, 3502 வேரியன்ட்களை காட்டிலும், 0 – 80% வரை சார்ஜ் ஏற 3.25 மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.