News October 9, 2025
மயிலாடுதுறை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு…

மயிலாடுதுறை மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News October 16, 2025
மயிலாடுதுறை: ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 5,800 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 18-35(SC/ST-40, OBC-38)
6.ஆரம்ப தேதி: 21.10.2025
7.கடைசி தேதி: 20.11.2025
8. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 16, 2025
மயிலாடுதுறை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 15-வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் குளிச்சார் பகுதியை சேர்ந்த விமல்ராஜ், சாலமன், கலைவாணன் ஆகியோர் கடந்த 2021ஆம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் குற்றவாளிகள் மூவருக்கும் 11 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிபதி சத்தியமூர்த்தி தீர்ப்பளித்துள்ளார்.
News October 16, 2025
மயிலாடுதுறை: உயிர் தப்பிய குழந்தைகள்

கொள்ளிடம் அருகே மாதிரவேளூர் கிராமத்தில் கனமழை காரணமாக அருகில் இருந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தின் மீது 100 ஆண்டுகள் பழமையான அரசமரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்தது. இதில் அங்கன்வாடி மைய கட்டிடத்தின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக அங்கன்வாடி மைய கட்டிடத்தில் உள்ளே இருந்த குழந்தைகள் எந்த பாதிப்பும் இன்றி உயிர்த்தபினர்.