News April 15, 2024

பறிமுதல் செய்த 4 கோடி மதிப்புள்ள நகை ஒப்படைப்பு!

image

மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே கடந்த 12ஆம் தேதி உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.4 கோடி மதிப்புடைய நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கருவூலத்தில் வைக்கப்பட்டது. இதனையடுத்து, நகைகளுக்கான ஆவணங்கள் ஒப்படைத்ததை தொடர்ந்து வணிகவரி மற்றும் வருமானவரித்துறையினர் சரிபார்த்த நிலையில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் இன்று விடுக்கப்பட்டன.

Similar News

News July 5, 2025

மதுரையில் 11ம் வகுப்பு மாணவி கர்ப்பம்

image

மதுரையைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி கர்ப்பமுற்றார். விசாரணையில் பள்ளிக்கு பேருந்தில் செல்கையில் ஒருவர் பழக்கமாகி காதலித்தது தெரிந்தது. அவரது முகவரி தெரியாத நிலையில், அலைபேசியும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியுடன் ஆட்சியரிடம் அவரது தாய் புகார் அளித்துள்ள நிலையில் விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அரசு காப்பகத்தில் மாணவி தங்க வைக்கப்பட்டுள்ளார்.

News May 8, 2025

மதுரையில் 117 பள்ளிகள் 100% தேர்ச்சி

image

மதுரையில் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று வெளியான நிலையில் இதில் மதுரை மாவட்டம் 14-ம் இடத்தை பெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் 324 பள்ளிகள் உள்ளது. அதில் 8 அரசு பள்ளிகள் உட்பட 117 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவ மாணவிகளில் 10526 பேரில் 9680 பேர் தேர்ச்சி பெற்ற பெருமையை மதுரை பெற்றுள்ளது.படிப்பிலும் மதுரை கெத்துதாங்க,மதுரை கெத்துதான் தெரிய மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News May 7, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து காவலர்கள்

image

மதுரை மாவட்ட காவல்துறையால் இன்று (மே.01) இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்குமார் தலைமையில், ஊரச்சிகுளம், மேலூர், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, சமயநல்லூர், பேரையூர் பகுதிகளுக்காக காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் சார்பு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!