News October 9, 2025

சற்றுமுன்: அதிரடியாக கைது செய்தனர்

image

மத்திய பிரதேசத்தில் கோல்ட்ரிப் இருமல் <<17944206>>மருந்தால் 21 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் <<>>அதன் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை போலீசார் உதவியுடன் மத்திய பிரதேச போலீசார் கோடம்பாக்கத்தில் வைத்து சற்றுமுன் கைது செய்தனர். அவரை காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஆலைக்கு நேரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

Similar News

News October 9, 2025

நயனின் சினிமா வயது 22 ஆனது.. நெகிழ்ச்சி ❤️❤️

image

சினிமாவில் 22 ஆண்டுகளை நிறைவு செய்ததை நயன்தாரா நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். திரைப்படங்கள் தன் வாழ்க்கையின் காதலாக மாறும் என்று தெரியாமல், கேமரா முன்பு முதல்முறையாக நின்று 22 ஆண்டுகள் ஆகின்றன எனவும், ஒவ்வொரு ஃபிரேமும், ஒவ்வொரு ஷாட்டும், தன்னை வடிவமைத்து உருவாக்கியதாகவும் அவர் பூரிப்படைந்துள்ளார். நயன் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படத்தை கமெண்ட் பண்ணுங்க.

News October 9, 2025

காசா அமைதி திட்டத்தை வரவேற்கிறேன்: PM மோடி

image

அமைதி திட்டத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேலும், ஹமாஸும் கையெழுத்திட்ட நிலையில் PM மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். டிரம்ப்பின் முயற்சியையும் பாராட்டிய அவர், இந்த ஒப்பந்தம் PM நெதன்யாகுவின் வலுவான தலைமைக்கு ஒரு பிரதிபலிப்பு என தெரிவித்துள்ளார். பணயக்கைதிகள் விடுவிப்பு மற்றும் காசா மக்களுக்கு கிடைக்கும் மனிதாபிமான உதவிகள், நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News October 9, 2025

உலகின் துயரத்தை போக்கவே ராமாயணம்: மோகன் பகவத்

image

உலகின் துயரத்தை போக்கவே வால்மீகி ராமாயணத்தை படைத்ததாக RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். பகவான் ராமர் எப்போதும் நம்முடன் இருந்தாலும், அவரை அனைவரது வீடுகளுக்கும், வாழ்க்கையிலும் கொண்டு சென்றது வால்மீகி தான் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த பாரம்பரியத்தை மனித குலம் பொறுப்புணர்வுடன் முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!