News April 15, 2024
புதுவையில் இன்று மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது

மீன்களின் இனப்பெருக்க காலம் தொடங்கிய நிலையில், புதுச்சேரியில் இன்று முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. இதனால், விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் கரை திரும்பி தங்களது படகுகளை மீன் பிடித்துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இதனை அடுத்து புதுச்சேரி மீனவர்கள் தங்களது படகுகள் பழுது பார்க்கும் பணிகளை தொடங்கியுள்ளனர்.
Similar News
News February 17, 2026
புதுவையில் பொம்மை வியாபாரி தற்கொலை

அய்யங்குட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் பாவாடை சாமி(53). மாற்றுத் திறனாளியான இவர் பொம்மை வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு, மனைவி ஒரு மகன் உள்ளனர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பாவாடைசாமி, பலரிடம் கடன் பெற்று அவதி அடைந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை பாவாடைசாமி மன உளைச்சலால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 17, 2026
புதுவை ஜிப்மரில் வேலைவாய்ப்பு

“ஜிப்மரில் 26 இளநிலை மருத்துவ பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு எம்.பி.பி.எஸ்., படிப்பில் தேர்ச்சி, ஒரு ஆண்டு இன்டர்ன்ஷிப் செய்திருக்க வேண்டும். மேலும் வருகிற 27ம் தேதிக்குள் இதற்கு அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். வரும் 28ம் தேதி எழுத்துத் தேர்வு காலை நடைபெற்று, அன்றே நேர்காணலும் நடைபெறும்.” என்று புதுவை ஜிப்மர் இயக்குநர் வீர்சிங்நேகி தெரிவித்துள்ளார்.
News February 17, 2026
புதுவை ஜிப்மரில் வேலைவாய்ப்பு

“ஜிப்மரில் 26 இளநிலை மருத்துவ பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு எம்.பி.பி.எஸ்., படிப்பில் தேர்ச்சி, ஒரு ஆண்டு இன்டர்ன்ஷிப் செய்திருக்க வேண்டும். மேலும் வருகிற 27ம் தேதிக்குள் இதற்கு அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். வரும் 28ம் தேதி எழுத்துத் தேர்வு காலை நடைபெற்று, அன்றே நேர்காணலும் நடைபெறும்.” என்று புதுவை ஜிப்மர் இயக்குநர் வீர்சிங்நேகி தெரிவித்துள்ளார்.


