News October 9, 2025
உழவர் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை: அன்புமணி

நெல் கொள்முதல் நிலையங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் 4 லட்சத்துக்கும் அதிகமான நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதாகவும், ஏற்கெனவே கொள்முதல் செய்த 15 லட்சம் நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், உழவர் நலனில் திமுக அரசுக்கு அக்கறை இல்லை எனவும் அன்புமணி சாடியுள்ளார்.
Similar News
News October 9, 2025
BREAKING: செந்தில்பாலாஜிக்கு புதிய பொறுப்பு

மேற்கு மண்டலத்தில் குறிப்பாக, கோவையில் திமுக வெற்றிக்கு தேவையான அனைத்து அஸ்திரங்களையும் எடுக்க செந்தில்பாலாஜிக்கு தலைமை அங்கீகாரம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கட்சியில் உள்ளடி வேலை பார்ப்பவர்கள், கோஷ்டி சேர்ப்பவர்களை களையெடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். அதோடு, 2026 தேர்தலில் கரூருக்கு பதிலாக கோவையில் ஏதேனும் ஒரு தொகுதியில் செந்தில்பாலாஜியை களமிறங்கவும் தலைமை அறிவுறுத்தியுள்ளதாம்.
News October 9, 2025
3 நாள்களில் PF பணத்தை எடுப்பது எப்படி?

இதற்கு PF கணக்குடன் பேங்க், ஆதார், PAN ஆகியவை இணைக்கப்பட்டிருக்க வேண்டும் ✦EPFO போர்ட்டலில், லாக்-இன் செய்து, ‘Online Services’ல் ‘Claim’ஐ கிளிக் செய்யவும் ✦வங்கி அக்கவுண்டை ‘Verify’ செய்து, என்ன வகை Withdrawal செய்ய வேண்டுமோ, அதை தேர்வு செய்யுங்கள் (PF Advance, Final Settlement) ✦Withdrawal-க்கான ஃபார்மை நிரப்பிய பின், வங்கி எண் போன்ற தகவல்களை சரிபார்த்து கொடுத்தால் போதும். SHARE IT.
News October 9, 2025
கலைஞர் IN, அம்பேத்கர் OUT? அரசின் அறிவிப்பால் சர்ச்சை

சாதிப் பெயர்களுடன் உள்ள ஊர்களின் பெயர்களை மாற்ற TN அரசு அரசாணை வெளியிட்ட விவகாரம் சர்ச்சையாக வெடித்துள்ளது. காரணம், தற்போதுள்ள பெயர்களுக்கு மாற்றாக <<17953629>>அரசு பரிந்துரை செய்துள்ள<<>> தலைவர்களின் பட்டியலில் அம்பேத்கர், கொடிகாத்த குமரன், சுப்ரமணிய சிவா உள்ளிட்ட தலைவர்களின் பெயர்கள் இடம்பெறாமல் ‘கலைஞர்’ பெயர் இடம் பெற்றுள்ளது ஏன் என அண்ணாமலை உள்ளிட்ட பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?