News October 9, 2025

CJI-ஐ தாக்க முயன்றவர் மீது வழக்கு பாய்ந்தது

image

CJI பி.ஆர்.கவாய்யை காலணி வீச தாக்க முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது பெங்களூருவில் Zero FIR பதியப்பட்டுள்ளது. அனைத்து இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் பக்தவாத்சலா அளித்த புகாரின் அடிப்படையில், விதான் சவுதா போலீஸ் IPC 132, 133 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளது. அதில் உடனடியாக அவருக்கு தண்டனை வழங்க வலியுறுத்தியுள்ள நிலையில், வழக்கு டெல்லி திலக் மார்க் போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.

Similar News

News October 9, 2025

கலைஞர் IN, அம்பேத்கர் OUT? அரசின் அறிவிப்பால் சர்ச்சை

image

சாதிப் பெயர்களுடன் உள்ள ஊர்களின் பெயர்களை மாற்ற TN அரசு அரசாணை வெளியிட்ட விவகாரம் சர்ச்சையாக வெடித்துள்ளது. காரணம், தற்போதுள்ள பெயர்களுக்கு மாற்றாக <<17953629>>அரசு பரிந்துரை செய்துள்ள<<>> தலைவர்களின் பட்டியலில் அம்பேத்கர், கொடிகாத்த குமரன், சுப்ரமணிய சிவா உள்ளிட்ட தலைவர்களின் பெயர்கள் இடம்பெறாமல் ‘கலைஞர்’ பெயர் இடம் பெற்றுள்ளது ஏன் என அண்ணாமலை உள்ளிட்ட பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?

News October 9, 2025

Recipe: பப்பாளிப் பழ அவல் கேசரி செய்யலாம் வாங்க!

image

வாணலியில் வெள்ளை அவலை நன்றாக வறுத்து, ரவை பதத்தில் அரைத்து தூளாக்கவும். அடிகனமான கடாயில் 2 தேக்கரண்டி நெய், கொதிக்க வைத்த பாலை ஊற்றி, பப்பாளிக் கூழ், சர்க்கரை, பொடித்த அவல், ஏலக்காய் பொடி, பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறவும். அடுப்பை சிம்மில் வைத்து, இந்த கலவையில் நெய்யில் பொன்னிறமாக வறுத்த முந்திரி, பாதாம், வெள்ளரி விதையை சேர்த்து இறக்கினால் சுவையான பப்பாளிப் பழ அவல் கேசரி ரெடி. SHARE IT.

News October 9, 2025

ரோஹித், கோலி மரியாதையாக நடத்தப்பட வேண்டும்: அஸ்வின்

image

ரோஹித் மற்றும் கோலி விஷயத்தில் BCCI அவர்களை மரியாதையாக நடத்த வேண்டும் என அஸ்வின் வலியுறுத்தியுள்ளார். இருவரும் 2 சகாப்தங்களாக அணிக்காக விளையாடிய சீனியர்கள் எனவும், அவர்கள் அணியில் நீடிக்க தகுதியுடையவர்கள் என்றும் அஸ்வின் கூறியுள்ளார். மேலும், கேப்டன் பொறுப்பில் ரோஹித் இருக்க வேண்டியவர் எனவும், இருப்பினும் 2027 WC-ஐ கவனத்தில் கொண்டு BCCI எடுத்த முடிவில் உடன்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!