News October 9, 2025
அடிக்கடி திருமண கனவுகள் வருகிறதா?

➤சிங்கிள்ஸ்க்கு திருமண கனவு வந்தால், புதிய பயணம் தொடங்குமாம். ➤காதலி (அ) தோழியை மணம் செய்வதாக வந்தால், அவர்களுடன் உறவு வலுப்படும். ➤திருமணத்திற்கு பின் வேறொருவரை மணம் செய்வதாக வந்தால், அவரை அதிகம் நேசிக்கிறீர் என அர்த்தம். எனினும், அவரை விட்டு விலகுவது நல்லது. ➤நீங்களோ, மற்றவரோ திருமணத்திற்கு தயாராவதாக கனவு வந்தால், வருத்தம் (அ) பதட்டத்தை குறிக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
Similar News
News October 9, 2025
சருமம் பளிச்சிட உதவும் மாதுளை தேநீர்!

சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்க, ரத்த சர்க்கரை அளவு குறைய, மழைக்காலத்தில் அதிகரிக்கும் கீழ்வாத பிரச்னைகளுக்கு இந்த மாதுளை தேநீர் உதவும் என சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உலர்ந்த மாதுளை தோல், மஞ்சள், சுக்கு, ஏலக்காய் ஆகியவற்றை பொடியாக்கி நீரில் கலந்து கொதிக்க வைக்கவும். இவற்றை வடிகட்டி, அதில் கொஞ்சம் எலுமிச்சைச் சாறு, பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்த்தால், சுவையான மாதுளை தேநீர் ரெடி. SHARE IT.
News October 9, 2025
BREAKING: ஸ்டிரைக்.. தமிழக அரசுக்கு அடுத்த நெருக்கடி

பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே வழங்கிட வலியுறுத்தி நவ.18-ல் ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது. மேலும், அரசின் பல்வேறு துறைகளில் 30% மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், இடைநிலை, முதுகலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இது ஆளும் திமுக அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
News October 9, 2025
விஜய்யின் உயிர் நண்பன் சஞ்சீவ் சொன்ன தகவல்

விஜய்யின் நண்பர் சஞ்சீவ் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார். அவரிடம் கரூர் விவகாரம் தொடர்பான கேள்விகள் வைக்கப்பட்டது. அப்போது, சம்பவ இடத்தில் இல்லை என்பதால் தனக்கு அதை பற்றி பேச போதுமான அறிவு கிடையாது என அவர் சொன்னார். ஆனால், விஜய்க்கு எந்த பயமும் இல்லை எனவும், சரியான நேரம் வரும்போது களத்துக்கு அவர் செல்வார் எனவும் சஞ்சீவ் பதிலளித்தார்.