News April 15, 2024

தேர்தலை புறக்கணிக்கும் வேங்கைவயல் மக்கள்

image

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் நீதி கிடைக்காததால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வேங்கைவயல் கிராமத்தின் குடிநீர் தொட்டியில் மனித மலம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை குடிநீரில் கலந்தது யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

Similar News

News September 16, 2025

இந்திய அணியின் புதிய ஸ்பான்சர் யாரு தெரியுமா?

image

ஆன்லைன் கேமிங் தடை சட்டம் அமலான நிலையில், Dream 11 உடனான ஒப்பந்தத்தை BCCI நிறுத்தியது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸிக்கான ஸ்பான்சர்ஷிப்பை Apollo Tyres பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு போட்டிக்கு ₹4.5 கோடி அளவில் ஜெர்ஸிக்கான ஸ்பான்சர்ஷிப்பை இந்நிறுவனம் வழங்கவுள்ளதாம். 2027 வரை ₹579 கோடிக்கு இந்நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகவும் BCCI வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News September 16, 2025

பாமக MLA-க்கள் ஒற்றுமையா இருக்கணும்: உதயநிதி

image

சேலத்தில் நடந்த அரசு விழா ஒன்றில் பாமக MLA-க்களான அருள் (ராமதாஸ் தரப்பு), சதாசிவம் (அன்புமணி தரப்பு) ஆகியோர், தமிழக அரசை பாராட்டியிருந்தனர். இந்நிலையில், சேலத்தைச் சேர்ந்த 2 MLA-க்கள் போட்டி போட்டு அரசை பாராட்டியதாக உதயநிதி கூறியுள்ளார். மேலும், இருவரும் ஒரே மாதிரி பேசியதாக தெரிவித்த அவர், இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என, பாமக பிரச்னையை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.

News September 16, 2025

முதலிடம் பிடித்த ஸ்மிருதி மந்தனா!

image

இந்திய இளம் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ODI ரேங்கிங்கில் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த ஆண்டில் அவர் முதல் இடம் பிடிப்பது இது 2-வது முறையாகும். 735 புள்ளிகளுடன் அவர் முதல் இடத்தில் இருக்க, இங்கிலாந்தின் Sciver-Brunt 731 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். நடைபெற்று வரும் இந்தியா- ஆஸ்திரேலியா தொடரில் ஸ்மிருதி மந்தனா முதல் ODI-ல் 58 ரன்களை அடித்திருந்தார்.

error: Content is protected !!