News April 15, 2024
தேர்தலை புறக்கணிக்கும் வேங்கைவயல் மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் நீதி கிடைக்காததால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வேங்கைவயல் கிராமத்தின் குடிநீர் தொட்டியில் மனித மலம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை குடிநீரில் கலந்தது யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
Similar News
News January 11, 2026
Gen Z போராட்டங்களை கண்ட நாடுகள்

Gen Z தலைமுறையினரால் நடத்தப்படும் போராட்டங்கள் உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அரசியல் சீர்திருத்தம், ஜனநாயக உரிமைகள் மற்றும் பொருளாதார அழுத்தங்கள் ஆகியவற்றை முன்னிறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். உலகம் முழுவதும் எந்தெந்த நாடுகளில் Gen Z போராட்டம் நடந்துள்ளன என்பதை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.
News January 11, 2026
தங்க மகன் காலமானார்

முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் தவிந்தர் சிங் (73) காலமானார். உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த அவர், ஹாஸ்பிடலில் இருந்து வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்துள்ளார். 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர். விளையாட்டுத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், 2021-ல் தயான் சந்த் விருதை மத்திய அரசு வழங்கியது.
News January 11, 2026
ஒரே நாளில் விஜய்க்கு காத்திருக்கும் சோதனை

நாளை விஜய்க்கு மிக முக்கிய நாளாகும். கரூரில் 41 பேர் பலியான துயரம் தொடர்பான வழக்கில் டெல்லியில் உள்ள CBI அலுவலகத்தில் விஜய் நாளை நேரில் ஆஜராகிறார். இதற்காக நாளை காலை தனி விமானம் மூலம் அவர் டெல்லி செல்லவுள்ளார். அதேநேரம், ‘ஜன நாயகன்’ படத்துக்கு உடனடியாக சென்சார் சான்றிதழ் வழங்கக் கோரிய மேல்முறையீட்டு மனு, அவசர வழக்காக நாளை விசாரணைக்கு வரவுள்ளதால், ஒட்டுமொத்த பார்வையும் விஜய் மீதே உள்ளது.


