News October 9, 2025
20 குழந்தைகள் மரணம்: எச்சரித்த மத்திய அரசு

ம.பி., மற்றும் ராஜஸ்தானில் இருமல் சிரப் குடித்து 20 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடைசி 24 மணிநேரத்தில் 4 மரணங்கள் பதிவான நிலையில், அனைத்து மாநிலங்கள், யூ.பிரதேசங்களுக்கு மத்திய பொது சுகாதார துறை அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது. அதன்படி, அனைத்து மூலப் பொருள்களையும், தயாரிக்கப்பட்ட மருந்துகளையும் முழுமையாக சோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News October 9, 2025
வார விடுமுறை.. அரசு முக்கிய தகவல்

வார விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் 855 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. சொந்த ஊர் செல்லும் மக்களின் நலன் கருதி கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 10-ம் தேதி 315 பேருந்துகளும், 11-ம் தேதி 310 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. கோயம்பேட்டில் இருந்து நாகை, ஓசூர், உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பேருந்துகளுடன் மொத்தம் 230 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
News October 9, 2025
10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. எனவே, வெளியே சென்றால் மறக்காமல் குடையுடன் செல்லுங்கள்.
News October 9, 2025
ஸ்டைலிஷ் தமிழச்சி ஜோனிடாவின் நியூ கிளிக்ஸ்

அரபிக் குத்து, செல்லம்மா பாடல் ப்ரோமோக்களில் கவனம் ஈர்த்த ஜோனிடா காந்தி தனது குரலால் மட்டுமல்ல அழகாலும் ரசிகர்களை கவர்ந்திழுப்பவர். ஜோனிடா பாடும் பாடல்கள் ஒரே நாளில் டிரெண்டிங் ஆகும் நிலையில், இவரது போட்டோஷுட் புகைப்படங்களும் இன்ஸ்டாவில் காட்டுத் தீ போல் வைரலாகும். தற்போது இவர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், எப்போது சினிமாவில் நடிப்பீங்க என்று ஆசை ஆசையாக கேட்கின்றனர்