News October 8, 2025
பயோமெட்ரிக் UPI பரிவர்த்தனையின் ஆபத்து

பயோமெட்ரிக் மூலம் UPI பரிவர்த்தனை செய்யும் முறை இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. இது Fast & Easy என்றாலும், இதில் சில ஆபத்துக்களும் உள்ளது. PIN போட்டு, பரிவர்த்தனை செய்யும் போது, தவறான பரிவர்த்தனைகளை தடுக்க முடியும். ஆனால், பயோமெட்ரிக்கில் அதனை செய்ய முடியாது. அதே நேரத்தில், சிலர் போலியாக கைரேகை (அ) Face Recognition மூலம் பணம் திருடவும் வாய்ப்புள்ளதாம்.
Similar News
News October 9, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 483 ▶குறள்: அருவினை யென்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின். ▶பொருள்: செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?.
News October 9, 2025
மத்திய அரசு நிறுவனத்தில் 646 காலிபணியிடங்கள்

மத்திய அரசின் CDAC நிறுவனத்தில் காலியாக உள்ள 646 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. புராஜக்ட் இன்ஜினியர், புராஜக்ட் சப்போர்ட், புராஜக்ட் மேனேஜர் ஆகிய பணியிடங்களுக்கு careers.cdac.in என்ற தளத்தில் வரும் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். கல்வித்தகுதி : BE/ BTech/ MCA முடித்திருக்க வேண்டும். பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.
News October 9, 2025
திமுக ஆட்சியில் தடையின்றி கஞ்சா விற்பனை: EPS

திமுக ஆட்சியில் போதைப் பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது என EPS குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகத்தில் கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா தங்கி தடையின்றி கிடைப்பதாகவும், அதற்கு திமுக நிர்வாகிகள் ஆதரவாக இருப்பதால் அதன் விற்பனையை போலீசால் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கஞ்சா விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.