News April 15, 2024

ரோஹித் வருகைக்காகக் காத்திருக்கும் பஞ்சாப் அணி

image

ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் ஷர்மாவை வாங்கத் தயாராக இருப்பதாக பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், எங்கள் அணிக்கு நிலைத்தன்மையும், சாம்பியன் மனநிலையும் கொண்ட கேப்டன் தேவை. ரோஹித்திடம் அவை அனைத்தும் உள்ளன. 2025 மெகா ஏலத்தில் அவர் வந்தால், எவ்வளவு தொகை வேண்டுமானாலும் செலவழித்து அவரை வாங்கத் தயாராக உள்ளோம் எனக் கூறியுள்ளார்.

Similar News

News April 29, 2025

இடி, பலத்த காற்றுடன் மழை வெளுக்கும்!

image

தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வரும் மே 4-ம் தேதி வரை மழை நீடிக்கும் என IMD அறிவித்துள்ளது. இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் 30 – 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.

News April 29, 2025

தீவிரவாத தாக்குதல்.. அஜித் கேட்பது இதைத்தான்!

image

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தான் தனது இதயம் இருப்பதாக அஜித் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என வேண்டிக் கொள்வதாகவும், சாதி, மதம் என இந்தியர்களுக்குள்ளேயே நாம் சண்டையிட்டுக் கொள்ள கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், அனைத்து சாதி, மதங்களையும் மதித்து ஒற்றுமையான, அமைதியான சமூகமாக நாம் வாழ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

News April 29, 2025

கடனாளியாக்கும் முதல்வர்: அரசு ஊழியர்கள் சங்கம்

image

சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்த 9 அறிவிப்புகள் கடன் சார்ந்த விஷயங்களாகவே இருப்பதாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. ஊழியர்களுக்கு சலுகை கொடுப்பது போல் ஏமாற்றி, மீண்டும் அரசுக்கே திரும்ப பெறக்கூடிய வகையில் கடனாளியாக்க முயல்வதாகவும், திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட பழைய ஓய்வூதியத்திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்றும் அச்சங்கம் சாடியுள்ளது.

error: Content is protected !!