News April 15, 2024

ரோஹித் வருகைக்காகக் காத்திருக்கும் பஞ்சாப் அணி

image

ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் ஷர்மாவை வாங்கத் தயாராக இருப்பதாக பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், எங்கள் அணிக்கு நிலைத்தன்மையும், சாம்பியன் மனநிலையும் கொண்ட கேப்டன் தேவை. ரோஹித்திடம் அவை அனைத்தும் உள்ளன. 2025 மெகா ஏலத்தில் அவர் வந்தால், எவ்வளவு தொகை வேண்டுமானாலும் செலவழித்து அவரை வாங்கத் தயாராக உள்ளோம் எனக் கூறியுள்ளார்.

Similar News

News August 15, 2025

தலைமை மீது அப்செட்டில் MP தங்க தமிழ்செல்வன்!

image

திமுக தலைமை மீது MP தங்க தமிழ்செல்வன் அதிருப்தியில் இருக்கிறார். <<17279741>>அரசு விழா மேடையில் தன்னை அவமதித்த<<>> ஆண்டிபட்டி MLA மகாராஜனுக்கு எதிராக அவர் தலைமையிடம் முறையிட்டுள்ளார். ஆனால், MLA மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், மா.செ.,வாக இருந்தும் தனக்கு மதிப்பில்லை என நிர்வாகிகள் சிலரிடம் புலம்பியுள்ளாராம். தேர்தல் நெருங்கும் சமயத்தில் இந்த மோதல் கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News August 15, 2025

ஏன் ரோஹித் வெற்றிகரமான கேப்டன்?

image

கிரிக்கெட்டில் ரோஹித்தின் கேப்டன்சிக்கு தனித்தன்மை உண்டு. இந்நிலையில், ஏன் ரோஹித் சர்மா ஒரு வெற்றிகரமான கேப்டனாக ஜொலிக்கிறார் என்று புவனேஷ்வர் குமாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ரோஹித் ஒரு முதிர்ச்சியான கேப்டன் என்றார். ஒவ்வொரு வீரர்களின் பலத்தையும் புரிந்துகொண்டு, அவர்களை எவ்வாறு பயன்படுத்துவது என்று அவருக்கு நன்றாகத் தெரியும் எனக் குறிப்பிட்டார். ரோஹித் கேப்டன்சியில் மறக்க முடியாத மொமண்ட் எது?

News August 15, 2025

சுதந்திர தின உரை: PM மோடி புதிய சாதனை

image

79-வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் கொடியேற்றி வைத்த PM மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். மோடியின் மிக நீண்ட சுதந்திர தின உரையாக இது அமைந்தது. தனது முதல் சுதந்திர தின உரையை 2014-ல் 65 நிமிடங்கள் பேசிய அவர், அதிகபட்சமாக கடந்த ஆண்டு 98 நிமிடங்கள் பேசியிருந்தார். தற்போது, அதையும் தாண்டி 105 நிமிடங்கள் தொடர்ச்சியாக உரையாற்றியுள்ளார். மோடியின் பேச்சில் உங்களை கவர்ந்த அம்சம் எது?

error: Content is protected !!