News October 8, 2025

ஈபிஎஸ் வருகைக்கு பாஜகவினர் வைத்த பேனர்!

image

திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பிரச்சார பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பிரச்சார பயணத்திற்காக அ.தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் விளம்பர பதாகைகள் வைத்து வருகின்றனர். அதேபோல, கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு கட்-அவுட்டுகள் வைத்து வரவேற்புக்கு தயாராகி வருகின்றனர்.

Similar News

News October 28, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

நாமக்கல் மாவட்டம் நாமக்கலில் இருந்து நாளை (புதன்) 29/10/2025 மற்றும் வரும் நாட்களில் காலை 8:30 மணிக்கு கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ செல்ல 20671 பெங்களூரூ வந்தே பாரத் ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன! நாமக்கல் சுற்றுவட்டார பகுதி மக்கள் முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்! இந்த செய்தியினை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.

News October 28, 2025

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி இன்று 28.10.2025 வெளியிட்ட செய்திக் குறிப்பில், “வரும் 30.10.2025 அன்று எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் எரிவாயு உருளை பதிவு, விநியோகம் மற்றும் புகார் தொடர்பான கூட்டம் மாலை 3.30 மணியளவில் நடைபெற உள்ளது” என அறிக்கை வாயிலாக கூறியுள்ளார்.

News October 28, 2025

அறிவித்தார் நாமக்கல் ஆட்சியர்!

image

நாமக்கல் மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருகிற (அக்.31) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. மேலும், இக்கூட்டத்தின் வாயிலாக வேளாண் இடு பொருள் இருப்பு விவரங்கள் மற்றும் தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!