News October 8, 2025
விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவ ராஜ்குமார்

விஜய் தனது அரசியல் பயணத்தில் யோசித்து நிதானமாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்று சிவ ராஜ்குமார் அறிவுறுத்தியுள்ளார். திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய்யின் அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்தார். விஜய்யின் அரசியல் பேச்சு நன்றாக இருந்ததாக குறிப்பிட்ட அவர், கரூர் துயர் ஒரு நேரக்கூடாத நிகழ்வு என்றும், அதனால் வருத்தமடைந்ததாகவும் கூறினார்.
Similar News
News October 9, 2025
BREAKING: அதிமுக கூட்டணியில் புதிய கட்சி.. இபிஎஸ் அதிரடி

அதிமுக கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக EPS மறைமுகமாக கூறியுள்ளார். குமாரபாளையம் தேர்தல் பரப்புரையில், அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என EPS பேசினார். அப்போது, கூட்டத்திற்கு நடுவே சிலர் தவெக கொடியை உயர்த்தி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது, ‘கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது ஸ்டாலின் அவர்களே!’ என உணர்ச்சி பொங்க பேசினார். இது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
News October 9, 2025
10th தகுதியிலான தேர்வுக்கு 42 PhD ஆய்வாளர்கள் விண்ணப்பம்

நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு நிலைமைக்கு இதைவிட சிறந்த உதாரணம் இருந்துவிட முடியாது. ம.பி.,யில் 7,500 போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். 10th தகுதி மட்டுமே கொண்ட இப்பணிக்கு 42 PhD ஆய்வாளர்கள், ஆயிரக்கணக்கான டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான சம்பளம் ₹19,500 – ₹62,000 என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் கருத்து என்ன?
News October 9, 2025
சண்டே ரயில்வே ஸ்டேஷனே இயங்காது.. எங்கு தெரியுமா?

மேற்கு வங்கத்தில் உள்ள ‘ரேநகர்’ ரயில் நிலையம் தான் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படுகிறது. இங்கு நிற்கும் ஒரே பயணிகள் ரயிலான பான்குரா-மாசகிராம் எக்ஸ்பிரஸ், ஞாயிறு அன்று இயங்காததால் இந்த ரயில் நிலையம் மூடப்படுகிறதாம். அதேநேரம், இங்கு விநியோகிக்கப்படும் டிக்கெட்களை வாங்க, ஞாயிறு அன்று ரயில் நிலைய மேலாளர் பர்தாமன் நகருக்கு செல்வதால் அன்று ரயில் இயங்குவதில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.