News October 8, 2025
நெல்லை: NLCயில் 1,101 காலியிடங்கள்! உடனே APPLY

நெல்லை மக்களே, தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தில் 1101 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ITI, அறிவியல் துறை சார்ந்த டிகிரி முடித்தவர்கள் 21.10.2025 ம் தேதிக்குள் இங்கே <
Similar News
News October 9, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [அக்.08] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் ரகுபதிராஜா இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
News October 8, 2025
நெல்லை: நாளை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சபாநாயகர்

நெல்லை மாவட்ட பகுதிகளான உவரி, உறுமன்குளம், கரைச்சுத்தி புதூர், கூந்தன் குழி, இராமநாதபுரம், திருவம்பலபுரம் ஆகிய பகுதிகளில் பல்வேறு அரசு கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் அரசு நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகளில் நாளை (அக்.9) காலை முதல் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
News October 8, 2025
நெல்லை: நீதிபதி மீது காலணி வீசியவர் மீது வழக்கு

சேரன்மகாதேவி நீதிமன்றத்தில், திருட்டு வழக்கில் கைதான மத்தியபிரதேசத்தை சேர்ந்த திரேந்தர் சிங் (29), நீதிபதி அருண்சங்கரை நோக்கி காலணி வீசினார். காலணி நீதிபதியின் கணினியில் பட்டு விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. வக்கீல்கள் அவரைப் பிடித்தனர். போலீசார் விசாரணை நடத்தி, திரேந்தரை கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர்.தொடர்ந்து அவர் மீது போலீசார் நேற்று இரவு வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.